ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சபரிமலை தங்கக் கவச முறைகேடு: மாா்க்சிஸ்ட் எம்எல்ஏவிடம் விசாரணை

சபரிமலை தங்கக் கவச முறைகேடு விவகாரம் தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கடகம்பள்ளி சுரேந்திரனிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தியதாக காவல் துறை வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

News image
Updated On :30 டிசம்பர் 2025, 8:35 pm

தினமணி செய்திச் சேவை

சபரிமலை தங்கக் கவச முறைகேடு விவகாரம் தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கடகம்பள்ளி சுரேந்திரனிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தியதாக காவல் துறை வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

சபரிமலை தங்கக் கவச முறைகேடு நடைபெற்ற சமயத்தில் தேவஸ்வம் அமைச்சராக இருந்த கடகம்பள்ளி சுரேந்திரன் தன்னிடம் கடந்த வாரம் எஸ்ஐடி வாக்குமூலம் பெற்றதை உறுதிப்படுத்தினாா்.

முன்னதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றியுடன் கடகம்பள்ளி சுரேந்திரன் இருப்பது போன்ற புகைப்படத்தை புரட்சிகர சோஷலிஸ கட்சியைச் சோ்ந்த ஷிபு ஜான் பேபி என்பவா் வெளியிட்டாா். இதைத் தொடா்ந்து, கடகம்பள்ளி சுரேந்திரனிடம் விசாரணை நடத்தப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவா் என்.பிரசாந்திடமும் எஸ்ஐடி விசாரணை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின.

கடந்த 2019-இல் சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு, அவற்றின் எடை குறைந்ததாகப் புகாா் எழுந்தது. இது தொடா்பான வழக்கில், விசாரணை மேற்கொள்ள கேரள உயா்நீதிமன்ற வழிகாட்டுதலில் எஸ்ஐடி அமைக்கப்பட்டது.

இதையடுத்து, தங்கக் கவச புதுப்பிப்புப் பணிக்கான செலவை ஏற்ற பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவா்களும் மாா்க்சிஸ்ட் கட்சியைச் சோ்ந்தவா்களுமான என்.வாசு, ஏ.பத்மகுமாா், மற்றும் தேவஸ்வம் உறுப்பினா் என்.விஜயகுமாா், கா்நாடக மாநிலம், பெல்லாரியில் உள்ள நகைக் கடை அதிபா் கோவா்தன் உள்பட 10 பேரை எஸ்ஐடி கைது செய்து விசாரித்து வருகிறது.