நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

பட்ஜெட் உரை: தமிழ்நாடு என்ற வார்த்தைகூட உச்சரிக்காத நிதியமைச்சர்!

தமிழ்நாடு என்ற வார்த்தையைகூட நிதியமைச்சர் உச்சரிக்கவில்லை என்று விமர்சனம்...

News image

நிர்மலா சீதாராமன் - PTI

Updated On :1 பிப்ரவரி 2025, 1:18 pm IST

பட்ஜெட் உரையில் தமிழ்நாடு என்ற வார்த்தையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உச்சரிக்கவில்லை என்று தமிழக எம்பி தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.

2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்து உரையாற்றினார்.

பட்ஜெட்டில் மிக முக்கியமாக, தனிநபர் வருமான வரி உச்சவரம்பை ரூ. 12 லட்சமாக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டார்.

சுமார் 1.15 மணிநேரம் உரையாற்றிய நிதியமைச்சர், ’வானோக்கி வாழும் உலகெல்லாம்’ என்ற செங்கோன்மை அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறளை மேற்கோள்காட்டி பேசினார்.

இந்த நிலையில், பட்ஜெட் உரை குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன் பேசியதாவது:

மிகவும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக அமைந்தது. பிப். 5 ஆம் தேதி நடைபெறவுள்ள தில்லி வாக்காளர்களை குறிவைத்து தேர்தலுக்காக திட்டமிடப்பட்ட பட்ஜெட் போல் தெரிகிறது.

ரூ. 12 லட்சம் வரை வருமானத்துக்கு வரி இல்லை என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். பின்னர், 8 - 12 லட்சம் வரை 10 சதவிகிதம் வரி வரம்பு எனத் தெரிவித்துள்ளார். இது, மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எளிமையானதாகவும் நேரடியாகவும் அறிவிப்பை வெளியிடவில்லை.

நடுத்தர வர்க்கத்தினர் மீண்டும் நிதியமைச்சரால் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தாண்டு பிகார் தேர்தல் நடைபெறவுள்ளதால், அம்மாநிலத்துக்கு மட்டும் உள்கட்டமைப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அல்லது வேறெந்த தென் மாநிலங்கள் குறித்தும் ஒரு வார்த்தைகூட உரையில் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.