/

தில்லி தொழிற்சாலையில் தீ விபத்து!

தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது பற்றி..

News image

தீ விபத்து

Updated On :3 பிப்ரவரி 2025, 11:58 am IST

வடக்கு தில்லியில் உள்ள பவானா டிஎஸ்ஐடிசி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இன்று காலை 7:51 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு 16 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன.

தீயை அணைக்கவும், அருகிலுள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கவும் தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதுதொடர்பாக மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.