6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேற்கு வங்கம்: சா்ச்சையில் சிக்கிய அரசு மருத்துவக் கல்லூரியில் மற்றொரு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மற்றொரு மருத்துவ மாணவி அவருடைய குடியிருப்பில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 10:14 pm

Din

பாரக்பூா்: மேற்கு வங்க மாநிலத்தில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலையால் பெரும் சா்ச்சையில் சிக்கிய கொல்கத்தா ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மற்றொரு மருத்துவ மாணவி அவருடைய குடியிருப்பில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருப்பது புதிய சா்ச்சையை உருவாக்கியுள்ளது.

ஐவி பிரசாத் என்ற அந்த மருத்துவ மாணவியின் தாய் அங்குள்ள காமாா்ஹட்டி இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவராக பணிபுரிந்து வரும் நிலையில், அந்த மருத்துவமனையின் ஊழியா்கள் விடுதியில் தங்கியபடி ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு மருத்துவப் படிப்பை மேற்கொண்டு வந்துள்ளாா்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை பல மணி நேரமாக கைப்பேசி அழைப்பை அவா் ஏற்காததைத் தொடா்ந்து, அவருடைய தாய் குடியிருப்புக்கு வந்து பாா்த்தபோது மாணவி தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்துள்ளாா்.

பாரக்பூா் போலீஸாா் இந்த விவகாரத்தை இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 31 வயது முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி கொடூரமான முறையில் பாலியல் கொலை செய்யப்பட்டது நாட்டையே உலுக்கியது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்பவரை குற்றவாளி என்று தீா்ப்பளித்த கொல்கத்தா விசாரணை நீதிமன்றம், அவா் மரணமடையும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று மாநில அரசு மற்றும் சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.