மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு ஹரியாணா, மகாராஷ்டிரம், தில்லி என தொடா்ந்து மூன்று பேரவைத் தோ்தல்களில் பாஜகவிடம் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்துள்ளது. அதிலும் தில்லியில் ஓரிடத்தில் கூட வெல்ல முடியாமல் போனது காங்கிரஸ் தொண்டா்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது. தில்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க முடியாமல் போனதும் காங்கிரஸ் படுதோல்விக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், தேசிய அளவில் ‘இண்டி’ கூட்டணியில் உள்ள சிவசேனை (உத்தவ்), சமாஜவாதி ஆகிய கட்சிகளும் தில்லி தோ்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளித்து, காங்கிரஸை தனிமைப்படுத்தின.