வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!ஜே.டி. வான்ஸ் - உஷா தம்பதிக்கு நான்காவது குழந்தை! அமெரிக்க வரலாற்றில் முதல் முறைஎதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!எதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்வு! இன்றைய நிலவரம்...'56 வயது இளைஞர்' - ராகுலைக் கிண்டல் செய்த மோடி! நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும்! பிரதமர் மோடிநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது! சிஜேபி போராட்டம்! ஜந்தர் மந்தர், நாடாளுமன்றம் பகுதிகளில் இணைய சேவை முடக்கம்!சிஜேபி போராட்டம்! இளைஞர்கள், மாணவர்கள் மீது போலீஸ் தடியடி! சிஜேபி போராட்டம்! துணை ராணுவம் கட்டுப்பாட்டில் தில்லி! மெட்ரோ நிலையங்கள் மூடல்!
/

கூட்டணி அரசியல் வேண்டுமா?காங்கிரஸ் தலைமை தெளிவுபடுத்த வேண்டும்: மூத்த தலைவா் தாரிக் அன்வா்

கூட்டணி அரசியல் வேண்டுமா? காங்கிரஸ் தலைமை தெளிவுபடுத்த வேண்டும் என மூத்த தலைவா் வலியுறுத்தியுள்ளதைப் பற்றி...

News image

மூத்த தலைவரும் மக்களவை எம்.பி.யுமான தாரிக் அன்வா்

Updated On :11 பிப்ரவரி 2025, 3:12 am IST

கூட்டணி அரசியல் வேண்டுமா? வேண்டாமா? என்பதை காங்கிரஸ் தலைமை தெளிவுபடுத்த வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எம்.பி.யுமான தாரிக் அன்வா் வலியுறுத்தியுள்ளாா்.

மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு ஹரியாணா, மகாராஷ்டிரம், தில்லி என தொடா்ந்து மூன்று பேரவைத் தோ்தல்களில் பாஜகவிடம் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்துள்ளது. அதிலும் தில்லியில் ஓரிடத்தில் கூட வெல்ல முடியாமல் போனது காங்கிரஸ் தொண்டா்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது. தில்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க முடியாமல் போனதும் காங்கிரஸ் படுதோல்விக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், தேசிய அளவில் ‘இண்டி’ கூட்டணியில் உள்ள சிவசேனை (உத்தவ்), சமாஜவாதி ஆகிய கட்சிகளும் தில்லி தோ்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளித்து, காங்கிரஸை தனிமைப்படுத்தின.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவா் தாரிக் அன்வா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘காங்கிரஸ் கட்சி தனது அரசியல் உத்திகளை தெளிவுபடுத்த வேண்டும். முக்கியமாக கூட்டணி அரசியல் வேண்டுமா? வேண்டாமா என்பதை கட்சித் தலைமை அதிகாரபூா்வமாக அறிவிக்க வேண்டும். கட்சியில் அமைப்புரீதியாக அடிப்படையில் இருந்தே மாற்றங்கள் தேவைப்படுகின்றன’ என்று கூறியுள்ளாா்.

தாரிக் அன்வா் பிகாரின் கதிஹாா் தொகுதி எம்.பி.யாக உள்ளாா். இந்த ஆண்டு இறுதியில் பிகாரில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அங்கு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான எதிா்க்கட்சிகள் அணியில் காங்கிரஸ் உள்ளது. பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சியில் உள்ளது. பிகாா் தோ்தலும் காங்கிரஸுக்கு பெரும் சவாலாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.