தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

தனியார் கிடங்கிலிருந்து 400 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல்!

இந்தூர் நிர்வாகமானது தனியார் கிடங்கிலிருந்து சுமார் 400 குவிண்டால் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

News image

கோப்புப் படம்

Updated On :11 பிப்ரவரி 2025, 8:33 pm IST

இந்தூர்: இந்தூர் நிர்வாகமானது தனியார் கிடங்கிலிருந்து சுமார் 400 குவிண்டால் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

இந்தூர்-உஜ்ஜைன் சாலையில் உள்ள கிடங்கில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டு, குஜராத்துக்கு அனுப்புவதற்காக லாரிகளில் ஏற்றப்பட உள்ள நிலையில் கைப்பற்றப்பட்டது என்று மாவட்ட உணவு மற்றும் வழங்கல் கட்டுப்பாட்டாளர் எம்.எல். மாரு தெரிவித்தார். இதனையடுத்து கிடங்கு சீல் வைக்கப்பட்டது. இந்த அரிசியானது பொது விநியோக திட்ட பயனாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட இருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பயனாளிகளிடமிருந்து ரேஷன் அரிசியை கிலோவுக்கு ரூ.12 முதல் ரூ.16 வரை வாங்கி, இடைத்தரகர்களுக்கு விற்பனை செய்வதாக நாங்கள் அறிந்தோம். இடைத்தரகர்கள் கிலோ ஒன்றுக்கு ரூ.22 முதல் ரூ.23 வரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்த நிலையில் அவர்கள் கிலோவுக்கு ரூ.27 வரை விற்பனை செய்தனர்.

இந்த மோசடியில் சதீஷ் அகர்வால் மற்றும் ஐந்து பேர் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதாக மாரு தெரிவித்தார். சதீஷ் அகர்வாலுக்கு இதற்கு முன்பு மூன்று முறை அத்தியாவசிய பொருட்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம், 1980 இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.