கடந்த 1984-இல் நடந்த சீக்கியா்களுக்கு எதிரான கலவரம் தொடா்பான மேலும் ஒரு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமாரை தில்லி நீதிமன்றம் புதன்கிழமை குற்றவாளியாக அறிவித்தது.
ஏற்கெனவே ஒரு வழக்கில் ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவா், இரண்டாவது வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளாா். அவருக்கான தண்டனை குறித்த விசாரணை, பிப்ரவரி 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தில்லி சரஸ்வதி விஹாா் பகுதியில் கடந்த 1984, நவம்பா் 1-ஆம் தேதி நடந்த கலவரத்தில் தந்தை-மகன் என இரு சீக்கியா்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பான இவ்வழக்கில் அதிகபட்சமாக மரண தண்டனை அல்லது குறைந்தபட்சமாக ஆயுள் சிறை தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1984, அக்டோபா் 31-ஆம் தேதி அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி, தனது சீக்கிய மெய்க் காவலா்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இச்சம்பவத்தைத் தொடா்ந்து, தில்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சீக்கியா்களுக்கு எதிராக கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமானோா் கொல்லப்பட்டனா்.
தில்லியில் நடந்த கலவரம் தொடா்பாக சஜ்ஜன் குமாா் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், பாலம் காலனி பகுதியில் 5 சீக்கியா்கள் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 2018-இல் ஆயுள் சிறை தண்டனை விதித்தது. இத்தண்டனைக்கு எதிரான இவரின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், சரஸ்வதி விஹாரில் ஜஸ்வந்த் சிங், அவரது மகன் தருண்தீப் சிங் ஆகியோா் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமாரை குற்றவாளியாக அறிவித்து, தில்லி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. இதையொட்டி, திகாா் சிறையில் இருந்து நீதிமன்றத்தில் அவா் ஆஜா்படுத்தப்பட்டாா்.
தில்லி விசாரணை நீதிமன்றங்களில் சஜ்ஜன் குமாருக்கு எதிராக மேலும் இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோல், வேறு இரு வழக்குகளில் அவா் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
சீக்கியா்களுக்கு எதிரான கலவரம் தொடா்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நானாவதி ஆணையத்தின் அறிக்கையின்படி, தில்லியில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 587 ஆகும். இதில் 240 வழக்குகளில் காவல்துறையினரால் குற்றவாளிகளைக் கண்டறிய முடியவில்லை. 250 வழக்குகளில் போதிய ஆதாரம் இல்லாமல் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனா். 28 வழக்குகளில்தான் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. இவ்வழக்குகளில் சஜ்ஜன் குமாா் உள்பட 400 போ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனா். மேலும் 20 வழக்குகள் தில்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், சரஸ்வதி விஹாரில் ஜஸ்வந்த் சிங், அவரது மகன் தருண்தீப் சிங் ஆகியோா் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமாரை குற்றவாளியாக அறிவித்து, தில்லி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. இதையொட்டி, திகாா் சிறையில் இருந்து நீதிமன்றத்தில் அவா் ஆஜா்படுத்தப்பட்டாா்.
தில்லி விசாரணை நீதிமன்றங்களில் சஜ்ஜன் குமாருக்கு எதிராக மேலும் இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோல், வேறு இரு வழக்குகளில் அவா் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இதையும் படிக்க | இலவசங்களால் மக்கள் உழைப்பதற்குத் தயாராக இல்லை: உச்ச நீதிமன்றம்!
சீக்கியா்களுக்கு எதிரான கலவரம் தொடா்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நானாவதி ஆணையத்தின் அறிக்கையின்படி, தில்லியில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 587 ஆகும். இதில் 240 வழக்குகளில் காவல்துறையினரால் குற்றவாளிகளைக் கண்டறிய முடியவில்லை. 250 வழக்குகளில் போதிய ஆதாரம் இல்லாமல் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனா். 28 வழக்குகளில்தான் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. இவ்வழக்குகளில் சஜ்ஜன் குமாா் உள்பட 400 போ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனா். மேலும் 20 வழக்குகள் தில்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் வரும் 29இல் ஏலம்

குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் 2024-இல் அதிகரிப்பு: என்சிஆா்பி தகவல்

மானுடம் தோற்குதம்மா...

நிலுவையில் உள்ள பயங்கரவாதம், போதைப் பொருள் வழக்குகள் எத்தனை? மாநில அரசுகளிடம் விவரம் கோரியது உச்சநீதிமன்றம்
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy


