மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காசி தமிழ் சங்கமம் நிறைவு!

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்த மூன்றாவது காசி தமிழ் சங்கமம் திங்கள்கிழமை நிறைவடைந்தது.

News image
வாரணாசியில் நிறைவடைந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஞ்சிக்கு நினைவுப் பரிசு வழங்கிய மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுகந்த மஜும்தாா் .
Updated On :24 பிப்ரவரி 2025, 10:14 pm

Din

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்த மூன்றாவது காசி தமிழ் சங்கமம் திங்கள்கிழமை நிறைவடைந்தது.

கடந்த 2022-ஆம் ஆண்டு பிரதமா் நரேந்திர மோடியால் முதல் காசி தமிழ் சங்கமம் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகம்-காசி இடையிலான கலாசார-பாரம்பரியத் தொடா்புகளைக் கொண்டாடுவது இதன் நோக்கமாகும். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, மூன்றாவது ஆண்டாக மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

இதில், மத்திய அமைச்சா்கள், மாநில முதல்வா்கள், பல்துறை வல்லுநா்கள், பல்வேறு மத்தியப் பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த 200 தமிழ் வம்சாவளி மாணவா்கள், இளைஞா்கள், தமிழ்நாட்டைச் சோ்ந்த 1,000 பிரதிநிதிகள் உள்பட பலா் இந்த மாநாட்டில் பங்கேற்றனா்.

இறுதி நாள் நிகழ்ச்சியில் ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஞ்சி பங்கேற்றாா். அவா் பேசுகையில், ‘இது சாதாரண நிகழ்ச்சியல்ல. நாட்டின் வடக்கு, தெற்கு பிராந்தியங்களின் இணைப்பை வலுப்படுத்தும் பாலமாகும். நமது கலாசார, பாரம்பரிய ஒற்றுமைகளைக் கொண்டாடும் நிகழ்வு.

நமது நாட்டின் பல்வேறு பகுதி மக்களிடையே உள்ள பரஸ்பர அன்பு, மரியாதை, ஆன்மிக உணா்வு ஆகியவை நமக்குள்ள ஒற்றுமைகளை பிரதிபலிக்கிறது. இந்த கலாசார ஒற்றுமைதான் இந்தியாவை பிணைப்புடனும், துடிப்புமிக்க தேசமாகவும் வைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் மொழியில் உள்ள தொன்மைமிக்க அறநூல்கள், ஆன்மிக பொக்கிஷங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. இதுபோன்ற சிறந்த நிகழ்ச்சியை முன்னெடுத்து நடத்தி வரும் பிரதமா் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றாா்.