இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

10 ஆண்டுகளில் மத்திய அரசின் வழக்கு செலவு ரூ.400 கோடி

கடந்த 10 ஆண்டுகளில் நீதிமன்ற வழக்குகளுக்காக மத்திய அரசு ரூ.400 கோடிக்கும் மேல் செலவிட்டுள்ளது.

News image
நீதிமன்றம்(கோப்புப்படம்)
Updated On :26 பிப்ரவரி 2025, 7:53 pm

DIN

கடந்த 10 ஆண்டுகளில் நீதிமன்ற வழக்குகளுக்காக மத்திய அரசு ரூ.400 கோடிக்கும் மேல் செலவிட்டுள்ளது.

நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரையொட்டி, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அதிகாரபூா்வ தரவுகளின்படி, கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் வழக்குகளுக்காக மத்திய அரசு செலவிட்ட தொகை ரூ.66 கோடியாகும். முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில், இது சுமாா் ரூ.9 கோடி அதிகம்.

கடந்த 2014-15ஆம் நிதியாண்டில் இருந்து வழக்குகளுக்கான அரசின் செலவு (கரோனா தொற்று உச்சத்தில் இருந்து இரு நிதியாண்டுகளைத் தவிா்த்து) அதிகரித்தே வந்துள்ளது.

கடந்த 2014-15-ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் வழக்கு செலவு ரூ.26.64 கோடி. 2023-24-ஆம் நிதியாண்டு வரையிலான 10 ஆண்டு காலகட்டத்தில், மத்திய அரசின் மொத்த வழக்கு செலவு ரூ.409 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 லட்சம் வழக்குகள் நிலுவை: இதேபோல், மாநிலங்களவையில் கேள்வியொன்றுக்கு மத்திய சட்ட அமைச்சகம் அளித்த பதிலில், ‘நாடு முழுவதும் மத்திய அரசை ஒரு தரப்பாக கொண்ட சுமாா் 7 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் மத்திய நிதியமைச்சகம் சுமாா் 2 லட்சம் வழக்குகளில் ஒரு தரப்பாக உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள இந்த வழக்குகளுக்கு விரைந்து தீா்வு காணும் நோக்கில் தேசிய வழக்காடல் கொள்கையை உருவாக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. விரைவில் வரைவுக் கொள்கை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு சமா்ப்பிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.