அஸ்ஸாம் மாநிலத்தில் வியாழக்கிழமை அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் வியாழக்கிழமை அதிகாலை 2.25 மணியளவில் ரிக்டர் அளவில் 5 ஆகப் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க : 10 ஆண்டுகளில் மத்திய அரசின் வழக்கு செலவு ரூ.400 கோடி
அஸ்ஸாம் மாநிலம் மோரிகான் நகரை மையமாக கொண்டு 16 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குவாஹத்தி உள்ளிட்ட நகரங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் ஏதும் பதிவாகவில்லை.
கடந்த செவ்வாய்க்கிழமை ஒடிஸா மாநிலம் புரி அருகே வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், கொல்கத்தா மற்றும் ஒடிஸாவின் பல்வேறு இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு

புதுவை, கேரளம், அஸ்ஸாமில் வாக்குப் பதிவு நிறைவு!

பெண்களுக்கு மாதம் ரூ. 3,000.. இது அஸ்ஸாம் பாஜகவின் வாக்குறுதி!

கடைசி நாள்.. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய குவிந்த அஸ்ஸாம் தலைவர்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


