ஐடிஆர் தாக்கல் செய்ய ஜூலை 31 வரை காத்திருக்கக் கூடாதாம்! ஏன்?திருப்பதியில் வாழ்நாள் முழுவதும் விஐபி தரிசனம்! காவல்நிலையத்தில் புகார்! பின்னணி என்ன?டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ. 95.66 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 889 புள்ளிகளுடனும், 24,250 புள்ளிகளை கடந்த நிஃப்டி!மக்களவையில் பேசத் தடுத்ததை இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் பேசுவேன்: ராகுல் காந்திவந்தே மாதரத்தை அவமதிப்பது குற்றம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்!கத்திப்பாராவில் 101 அடி உயர மெட்ரோ பாலத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!மக்களவையில் தேர்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்!சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் விஜய் ஆய்வு! துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? அமித் ஷா எங்கே? பயந்துவிட்டாரா? மக்களவையில் ராகுல் கேள்வி! மாணவர்கள் போராட்டத்தை பாஜகவினர் குழந்தைகளே ஆதரிப்பார்கள்! ராகுல் காந்தி பேச்சு!மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி சாதாரணமான ஒன்றுதான்! மாநிலங்களவையில் ஜெ.பி. நட்டா பதில்!பாமக தலைவராக மீண்டும் அன்புமணி தேர்வு! நீட் வினாத்தாள் கசிவு! விரைவு நீதிமன்றத்தில் அவகாசம் கோரிய சிபிஐ! சென்னை – செய்யாறு இடையே 4 வழிச்சாலை: திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து!தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
/

அஸ்ஸாமிற்கு உதவுங்கள்... ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த ஆலியா பட்!

பாலிவுட் நடிகை ஆலியா பட் அஸ்ஸாம் வெள்ள பாதிப்பு குறித்து கூறியிருப்பதாவது...

News image

அஸ்ஸாம் வெள்ளம், ஆலியா பட். - படங்கள்: பிடிஐ, இன்ஸ்டா / ஆலியா பட்.

Updated On :29 ஜூலை 2026, 5:31 pm IST

பாலிவுட் நடிகை ஆலியா பட் அஸ்ஸாம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு இன்ஸ்டா பக்கத்தில் தனது ரசிகர்கள், பின் தொடர்வர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

அஸ்ஸாமில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75-ஆக உயா்ந்துள்ளது.

அஸ்ஸாமில் கடந்த ஜூலை 19 முதல் வெள்ள பாதிப்பு தொடங்கியது. இதனால், சாலைகள் மற்றும் வீடுகளை மழை நீா் சூழ்ந்துள்ளதால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாதிப்பில் இதுவரை 75 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. முக்கியமாக சிவசாகர், சாரிடியோ, கோலாகாட், ஜோர்ஹாட், நாகோன், சோனித்பூர் மற்றும் கம்ரூப் ஆகிய 7 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 622 கிராமங்கள், 45, 341.98 ஹெக்டர் நிலப்பரப்பு வெள்ளத்தினால் தவித்து வருகிறது.

இந்த நிலையில் நடிகை ஆலியா பட் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது:

தற்போது, இந்தியாவின் பல பாகங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் அஸ்ஸாம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மிகவும் சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது.

அஸ்ஸாமில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள். ஒட்டுமொத்த குடும்பமும் தங்களது வீடுகளை, நிலத்தை, வாழ்வாதாரத்தை இழந்துள்ளது. சிலர் தங்களின் அன்பானவர்களையும் இழந்துள்ளார்கள்.

இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இருப்பினும் நம்மை திகைக்க வைக்கிறது. அஸ்ஸாமிற்கு உடனடி நிவாரணம் தேவை. அவர்கள் அதிலிருந்து மீள நீண்ட காலம் தேவைப்படும். அதற்கு அனைவரும் உதவ வேண்டும்.

அடுத்த சில நாள்களில் நாம் எப்படியெல்லாம் உதவலாம் என்பதை சில அமைப்புகள் மூலம் தெரியப்படுத்துகிறேன் எனக் கூறியுள்ளார்.

நடிகை ஆலியா பட் கடைசியாக ஆல்பா எனும் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக, லவ் அண்ட் வார் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

Summary

Alia Bhatt urges to support relief efforts amid Assam floods

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.