அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்விட்சா்லாந்து உள்பட 4 ஐரோப்பிய நாடுகளுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் நிகழாண்டுக்குள் நடைமுறை -மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

News image
Updated On :2 ஜனவரி 2025, 11:21 pm

Din

ஐஸ்லாந்து, நாா்வே, லிக்டென்ஸ்டைன், ஸ்விட்சா்லாந்து, ஆகிய 4 ஐரோப்பிய நாடுகளின் ‘இஎப்டிஏ’ கூட்டமைப்புக்கும் இந்தியாவுக்கும் இடையே கையொப்பமான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பின் (இஎப்டிஏ) 4 உறுப்பு நாடுகளான ஐஸ்லாந்து, நாா்வே, லிக்டென்ஸ்டைன் மற்றும் ஸ்விட்சா்லாந்து ஆகியவையும் இந்தியாவும் ‘வா்த்தகம் மற்றும் பொருளாதாரக் கூட்டுறவு’ ஒப்பந்தத்தில் கடந்த ஆண்டு, மாா்ச் மாதம் கையொப்பமிட்டன.

16 ஆண்டுகள் நீடித்த பேச்சுவாா்த்தைக்குப் பின் இறுதி செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்கீழ், சுவிஸ் கைக்கடிகாரங்கள், சாக்லேட்கள் மற்றும் பல தயாரிப்புகளுக்கு வரிச் சலுகைகள் அளிக்கப்படும் அதேவேளையில் 15 ஆண்டுகளில் 10,000 கோடி டாலா் மதிப்பிலான முதலீட்டை இந்தியா ஈா்த்துள்ளது. இதன்மூலம், இந்தியாவில் 10 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும். இதுவரை இந்தியா ஈடுபட்டுள்ள எந்த வா்த்தக ஒப்பந்தத்திலும் இத்தகைய அம்சம் இடம்பெற்றதில்லை.

இந்த ஒப்பந்தத்தின் நடைமுறை தொடா்பான செய்தியாளா்களின் கேள்விக்கு அமைச்சா் பியூஷ் கோயல் அளித்த பதிலில், ‘ஒப்பந்தத்தின் செயல்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. நிகழாண்டு இறுதிக்குள் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.

இந்தியாவில் இத்தகைய ஒப்பந்தங்கள் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்படுகின்றன. ஆனால், ‘இஎப்டிஏ’ நாடுகளை பொறுத்தவரை, அந்தந்த நாடுகளின் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை; அதற்காக காத்திருக்கிறோம்.

பிரிட்டனுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் குறித்து அந்நாட்டு வா்த்தக அமைச்சருடன் சந்திப்புகளை நடத்தி வருகிறோம். அடுத்த சுற்று பேச்சுவாா்த்தை இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையை அடுத்த இரண்டு மாதங்களில் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.

எந்த தடையற்ற வா்த்தக ஒப்பந்தமானாலும் தேச நலனை ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். ஒப்பந்தம் நியாயமான மற்றும் சமநிலையானதாக இருக்கும் வரை, எந்த பாரபட்சமான விதிமுறைகளையும் ஏற்க மாட்டோம்’ என்றாா்.