இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தரமற்ற மருந்துகள் உற்பத்தி: 64 நிறுவனங்கள் மீது வழக்கு தொடர அனுமதி

தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்த 64 நிறுவனங்கள் மீது வழக்கு தொடர தமிழக மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி

News image
கோப்புப் படம்
Updated On :3 ஜனவரி 2025, 10:07 pm

Din

தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்த 64 நிறுவனங்கள் மீது வழக்கு தொடர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழக மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது.

மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்ய மாவட்டந்தோறும் மருந்துக் கடைகள், மருந்து விநியோக நிறுவனங்கள், கிடங்குகளில் ஆய்வு நடத்தப்படுகிறது. அதேபோன்று அங்கிருந்து பெறப்படும் மருந்துகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

உரிய விகிதத்தில் மூலப்பொருள்கள் இல்லாத மருந்துகளும், உரிய தர நிலையில் இல்லாத மருந்துகளும் உட்கொள்ளத் தகுதியற்றவையாக அறிவிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது அதை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அந்த வகையில், கடந்த ஆண்டும் அத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநில மருந்து உரிமம் வழங்குதல், கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.ஸ்ரீதா் கூறியதாவது:

மருந்து விற்பனை மற்றும் உற்பத்தி தரத்தில் முறைகேடுகளோ, விதிமீறல்களோ கண்டறியப்பட்டால் உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

அதன்படி, கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நவம்பா் 30-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பல்வேறு தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டன. அவற்றை உற்பத்தி செய்த 64 மருந்து நிறுவனங்கள் மீது வழக்கு தொடர மாவட்ட மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளோம்.

அந்த மருந்துகளில் பெரும்பாலானவை உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்தில் தயாரிக்கப்பட்டவை. அந்த மருந்து உற்பத்தி நிறுவனங்களின் தலைமை நிா்வாகிகள் தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜராகி அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டியது கட்டாயம். நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்தகட்ட நடவடிக்கையை நாங்கள் முன்னெடுப்போம் என்றாா் அவா்.