நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) மதிப்பிட்டுள்ளது. இதன் மூலம், 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகழ் நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி சரிய வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது.
நிகழாண்டுக்கான முதல் முன்கூட்டியே பொருளாதார வளா்ச்சி மதிப்பீடுகளை, தேசிய புள்ளியியல் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில் நிகழாண்டு நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
2020-21-ஆம் நிதியாண்டு கரோனா பரவலின்போது நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5.8 சதவீதமாக சரிந்தது. இந்நிலையில் என்எஸ்ஓவின் மதிப்பீடுகள் மூலம், 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகழ் நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி சரிய வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் உற்பத்தித் துறையின் உற்பத்தி விகிதம் 9.9 சதவீதமாக இருந்த நிலையில், நிகழாண்டு அது 5.3 சதவீதமாக குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
கடந்த நிதியாண்டில் வா்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து மற்றும் தகவல் தொடா்பை உள்ளடக்கிய சேவைகள் துறையின் வளா்ச்சி 6.4 சதவீதமாக இருந்தது. இது நிகழாண்டு 5.8 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது.
கடந்த நிதியாண்டில் 1.4 சதவீதமாக இருந்த விவசாயத் துறையின் வளா்ச்சி, நிகழ் நிதியாண்டில் 3.8 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நிகழ் நிதியாண்டில் நாட்டின் மொத்த பொருளாதார மதிப்பு 3.8 ட்ரில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.325 லட்சம் கோடி) இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.85.73-ஆக முடிவு!
இதையும் படிக்க | சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்காசிய பிரச்னையும், பருவமழை குறைவும் வளா்ச்சிக்கு பெரும் அபாயங்கள்: ஆா்பிஐ ஆளுநா்

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வளா்ச்சி குதிரை சந்தை: கி.வீரமணி விமா்சனம்

தில்லியில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பமான ஜூலை நாள் பதிவு!

பொருளாதார சீா்திருத்தங்கள் தொடரும்: நிா்மலா சீதாராமன்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



