தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

2047-க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மேம்படுத்துங்கள்: குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மேம்படுத்த அரசியல் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் உழைக்க வேண்டும்

News image

குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்(கோப்புப்படம்)

Updated On :8 ஜனவரி 2025, 4:24 am IST

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மேம்படுத்த அரசியல் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் உழைக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கேட்டுக்கொண்டார்.

உடுப்பி மாவட்டத்தின் தர்மஸ்தலாவில் உள்ள ஸ்ரீமஞ்சுநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பக்தர்களுக்கான மிக நீண்ட காத்திருப்பு வரிசை வளாகத்தை திறந்துவைத்து அவர் பேசியதாவது:

ஸ்ரீமஞ்சுநாத சுவாமி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வரிசையில் நிற்பதற்குத் தேவையான நவீன வசதிகளை செய்து கொடுத்திருப்பது பாராட்டுக்குரியதாகும். பக்தர்களின் நலனில் கோயில் நிர்வாகம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதை இது உணர்த்துகிறது.

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மேம்படுத்த இலக்கு நிர்ணயித்து பயணித்து வருகிறது. அந்த இலக்கை அடைவதற்கு அரசியல் கருத்து முரண்பாடுகள், இடையூறுகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் உழைக்க வேண்டும்.

வளர்ந்த இந்தியா என்பது இனிமேலும் கனவாக இல்லாமல், இலக்காக மாற வேண்டும். அதை நோக்கி நமது சிந்தனைகளை செலுத்த வேண்டும். இதற்கு இடையூறாக இருந்து வரும் பிரிவினை சக்திகளை அடையாளம் காண வேண்டும். பிளவு சிந்தனைகளை விதைத்து, நாட்டுக்குத் எதிரான தவறான தகவல்களைப் பரப்பி வரும் சக்திகளை ஒடுக்க வேண்டும்.

எல்லாரையும் அரவணைத்துச் செல்லும், எல்லாரின் நலனிலும் அக்கறைக் கொண்ட நமது நாட்டின் நற்பெயரைக் காக்கவும், ஜனநாயகத்தை பலப்படுத்தவும், நாட்டுக்கு எதிராக செயல்படுவோரின் செயல்களையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.