2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மேம்படுத்த அரசியல் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் உழைக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கேட்டுக்கொண்டார்.
உடுப்பி மாவட்டத்தின் தர்மஸ்தலாவில் உள்ள ஸ்ரீமஞ்சுநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பக்தர்களுக்கான மிக நீண்ட காத்திருப்பு வரிசை வளாகத்தை திறந்துவைத்து அவர் பேசியதாவது:
ஸ்ரீமஞ்சுநாத சுவாமி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வரிசையில் நிற்பதற்குத் தேவையான நவீன வசதிகளை செய்து கொடுத்திருப்பது பாராட்டுக்குரியதாகும். பக்தர்களின் நலனில் கோயில் நிர்வாகம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதை இது உணர்த்துகிறது.
2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மேம்படுத்த இலக்கு நிர்ணயித்து பயணித்து வருகிறது. அந்த இலக்கை அடைவதற்கு அரசியல் கருத்து முரண்பாடுகள், இடையூறுகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் உழைக்க வேண்டும்.
வளர்ந்த இந்தியா என்பது இனிமேலும் கனவாக இல்லாமல், இலக்காக மாற வேண்டும். அதை நோக்கி நமது சிந்தனைகளை செலுத்த வேண்டும். இதற்கு இடையூறாக இருந்து வரும் பிரிவினை சக்திகளை அடையாளம் காண வேண்டும். பிளவு சிந்தனைகளை விதைத்து, நாட்டுக்குத் எதிரான தவறான தகவல்களைப் பரப்பி வரும் சக்திகளை ஒடுக்க வேண்டும்.
எல்லாரையும் அரவணைத்துச் செல்லும், எல்லாரின் நலனிலும் அக்கறைக் கொண்ட நமது நாட்டின் நற்பெயரைக் காக்கவும், ஜனநாயகத்தை பலப்படுத்தவும், நாட்டுக்கு எதிராக செயல்படுவோரின் செயல்களையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப்பொருள் புழக்கம் இல்லாத தில்லி பல்கலைக்கழக மாடலை பிற கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும்: குடியரசு துணைத் தலைவா் வலியுறுத்தல்

ஆங்கிலேயரின் கொடுங்கோன்மையை எதிர்த்து நின்றவர் வாஞ்சிநாதன்: குடியரசு துணைத் தலைவர் புகழஞ்சலி

நோ்மறையான செய்திகள் புறக்கணிக்கப்பட கூடாது: குடியரசு துணைத் தலைவா் வலியுறுத்தல்

மனிதகுலத்துக்கு உதவிகரமாக தொழில்நுட்பம் இருக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



