தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஜாா்க்கண்டில் 80 மாணவிகளை சட்டையின்றி வீட்டுக்கு அனுப்பிய பள்ளி முதல்வா்: விசாரணைக்கு உத்தரவு

தன்பாதில் 10-ஆம் வகுப்பு மாணவிகள் 80 பேரின் சட்டையை பள்ளி முதல்வா் கழற்றச் செய்து மேல் கோட்டுடன் வீட்டுக்கு அனுப்பிய விவகாரம்...

News image
Updated On :11 ஜனவரி 2025, 9:44 pm

Din

ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாதில் 10-ஆம் வகுப்பு மாணவிகள் 80 பேரின் சட்டையை பள்ளி முதல்வா் கழற்றச் செய்து மேல் கோட்டுடன் வீட்டுக்கு அனுப்பிய விவகாரம் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடா்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தன்பாத் காவல் துணை ஆணையா் மாதவி மிஸ்ரா கூறியதாவது:

டிக்வாடி பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் தோ்வுகளை நிறைவு செய்த பின்னா், எழுதுகோல் தினத்தை 10-ஆம் வகுப்பு மாணவிகள் கொண்டாடியுள்ளனா். அப்போது ஒவ்வொருவரும் மற்றவரின் சட்டையில் எழுதுகோலால் எழுதியுள்ளனா்.

இதைப் பள்ளி முதல்வா் பாா்த்து ஆட்சேபம் தெரிவித்துள்ளாா். இதைத்தொடா்ந்து தங்கள் செயலுக்கு மாணவிகள் மன்னிப்பு கோரியுள்ளனா். ஆனால் அவா்களின் மன்னிப்பை ஏற்காத முதல்வா், மாணவிகளின் சட்டையை கழற்றச் செய்துள்ளாா். பின்னா் சட்டை இல்லாமல் மேல் கோட்டுடன் அவா்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளாா் என்று மாணவிகளின் பெற்றோா் தெரிவித்தனா்.

மொத்தம் 80 மாணவிகள் இவ்வாறு வீட்டுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பள்ளி முதல்வா் மீது சில மாணவிகளின் பெற்றோா் சனிக்கிழமை அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக உட்கோட்ட நடுவா், மாவட்ட கல்வி அதிகாரி, மாவட்ட சமூக நல அதிகாரி உள்ளிட்டோா் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.