பெங்களூருவில் பசுக்கள் தாக்கப்பட்டதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூருவில் கர்ணா கோபாலகிருஷ்ணன் என்பவரது வீட்டுக்கு அடுத்தத் தெருவில் கட்டப்பட்டிருந்த அவரது பசுக்களை, ஞாயிற்றுக்கிழமை பிகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியான சையத் நஸ்ரு மதுபோதையில் தாக்கியுள்ளார். சையத்தின் தாக்குதலால், பசுக்கள் ரத்தம் வழிந்த நிலையில் கத்தியதையடுத்து, கர்ணாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரும் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, பசுக்களைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையே, சையத் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, சையத் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கர்ணாவின் பசுக்கள் மீதான தாக்குதல் திட்டமிடப்பட்டது என்று பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நூறாண்டுகளுக்கு முன்னர். கால்நடை மருத்துவமனை கட்ட இந்துக்களுக்கு ஆங்கிலேயர்கள் தானமாக வழங்கிய சுமார் ரூ. 500 கோடி மதிப்புள்ள நிலத்தில், பள்ளி கட்ட முயன்று வரும் வக்ஃபு வாரியத்துடன் கர்நாடக அரசும் கைகோர்த்துள்ளதாக பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதையும் படிக்க: ஜன.21,27 நெட் தேர்வு நடைபெறும் - யுஜிசி அறிவிப்பு
கர்நாடக அரசின் இந்தப் போக்கை எதிர்க்கும்வகையில் போராட்டமும் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் கர்ணாவும், அவரது பசுக்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்ட கர்ணாவின் பசுக்கள் தாக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சாலவாடி நாராயணசாமி, முன்னாள் முதல்வரும், எம்.பி.யுமான பசவராஜ் பொம்மை, முன்னாள் துணை முதல்வர் சி.என். அஸ்வத் நாராயண் ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவத்திற்கு பின்னால் இருக்கும் உண்மையான குற்றவாளிகளும் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாலியல் வன்கொடுமைக்கு இரண்டரை வயது சிறுமி உயிரிழப்பு: ஒருவர் கைது

அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல்: ராகுல் காந்தி கண்டனம்

காங்கிரஸ் நிா்வாகி மீது திமுகவினா் தாக்குதல்: மாணிக்கம் தாகூா் கண்டனம்

மயிலாடுதுறை சம்பவம்: காங்கிரஸ் எம்எல்ஏ கண்டனம்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



