குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தில்லி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் மணீஷ் சிசோடியா!

மணீஷ் சிசோடியா வேட்புமனு தாக்கல் செய்தது பற்றி..

News image

வேட்புமனு தாக்கல் செய்த மணீஷ் சிசோடியா

Updated On :16 ஜனவரி 2025, 5:57 pm IST

தில்லியின் முன்னாள் துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளருமான மணீஷ் சிசோடியா இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவி வருகின்றது.

தில்லியின் முதல்வரும், ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளருமான கேஜரிவால் ஜன.15ல் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இந்த நிலையில், இன்று மணீஷ் சிசோடியா ஜங்புரா தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இன்று நான் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராகவும், அரவிந்த் கேஜரிவாலின் சிப்பாயாகவும்க ஐங்புரா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தேன். ஜங்புரா மக்கள் கடந்த 10 ஆண்டுகளில் அளித்த அன்பை இந்த முறையும் ஆம் ஆத்மி கட்சிக்கு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

கல்வி, சுகாதாரம் மேம்பாடு மூலம் மக்களின் எதிர்காலத்திற்கு பங்களிக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் நான் எனவே வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளேன் இவ்வாறு அவர் கூறினார்.

வேட்புமனு தாக்கலுக்கு முன் கல்கா தேவியின் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார் மணீஷ் சிசோடியா. பிப்.5ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.