காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

தில்லி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் மணீஷ் சிசோடியா!

மணீஷ் சிசோடியா வேட்புமனு தாக்கல் செய்தது பற்றி..

News image

வேட்புமனு தாக்கல் செய்த மணீஷ் சிசோடியா

Updated On :16 ஜனவரி 2025, 5:57 pm IST

தில்லியின் முன்னாள் துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளருமான மணீஷ் சிசோடியா இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவி வருகின்றது.

தில்லியின் முதல்வரும், ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளருமான கேஜரிவால் ஜன.15ல் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இந்த நிலையில், இன்று மணீஷ் சிசோடியா ஜங்புரா தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இன்று நான் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராகவும், அரவிந்த் கேஜரிவாலின் சிப்பாயாகவும்க ஐங்புரா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தேன். ஜங்புரா மக்கள் கடந்த 10 ஆண்டுகளில் அளித்த அன்பை இந்த முறையும் ஆம் ஆத்மி கட்சிக்கு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

கல்வி, சுகாதாரம் மேம்பாடு மூலம் மக்களின் எதிர்காலத்திற்கு பங்களிக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் நான் எனவே வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளேன் இவ்வாறு அவர் கூறினார்.

வேட்புமனு தாக்கலுக்கு முன் கல்கா தேவியின் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார் மணீஷ் சிசோடியா. பிப்.5ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.