சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்.. இலவச மின்சாரம், குடிநீர்.. வாடகைதாரர்களுக்கும்!

வாடகைதாரர்களுக்கு இலவச மின்சாரம், குடிநீர் வழங்குது பற்றி..

News image

அரவிந்த் கேஜரிவால்

Updated On :18 ஜனவரி 2025, 1:21 pm IST

தலைநகர் தில்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வாடகைதாரர்களுக்கு இலவச மின்சாரம், குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை தெரிவித்தார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை ஆம் ஆத்மி கட்சி தீவிரப்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என தலைநகரில் மும்முனை போட்டி நிலவி வருகின்றது. இதையடுத்து வாடகைதாரர்களுக்கும் இலவச மின்சாரம் குடிநீர் குறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் கேஜரிவால் பேசினார்.

தில்லி முழுவதும் வாடகைதாரர்கள் எழுப்பிய கவலைகளை எடுத்துரைத்தார். நான் எங்கு சென்றாலும், வாடகை வீட்டில் வசிப்பவர்களைச் சந்திக்கிறேன். அவர்கள் நல்ல பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளால் பயனடைகிறார்கள். ஆனால் இலவச மின்சாரம் மற்றும் குடிநீர் திட்டங்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த பிரச்னைக்குத் தீர்வு காண்பதாக உறுதியளித்த கேஜரிவால், "தேர்தலுக்குப் பிறகு, பூர்வாஞ்சல் பகுதியைச் சேர்ந்த வாடகைதாரர்கள் இலவச மின்சாரம், குடிநீர் ஆகியவை பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்க விரும்பும் ஆம் ஆத்மி தனது பிரசாரத்தை அதன் நலன் சார்ந்த முன்முயற்சிகளைச் சுற்றிக் கட்டமைத்துள்ளது, இலவசப் பயன்பாடுகள் மற்றும் மேம்பட்ட பொதுச் சேவைகளை அதன் முக்கிய பலங்களாக முன்வைக்கிறது.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.