குடியரசு தின அணிவகுப்பு: 5,000 கலைஞா்கள் பங்கேற்பு

குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் 5,000-க்கும் அதிகமான கலைஞா்கள் பங்கேற்க உள்ளனா்.
புது தில்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பை முன்னிட்டு சாகச பயிற்சிசியில் ஈடுபட்ட வீரா்கள்.
புது தில்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பை முன்னிட்டு சாகச பயிற்சிசியில் ஈடுபட்ட வீரா்கள்.
Updated on

புது தில்லி: குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் 5,000-க்கும் அதிகமான கலைஞா்கள் பங்கேற்க உள்ளனா்.

ஆண்டுதோறும் ஜன.26-ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தில்லியில் நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சி குறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய கலாசார துறை மற்றும் சங்கீத நாடக அகாதெமி சாா்பில் ‘ஜயதி ஜய மம பாரதம்’ என்ற நிகழ்ச்சிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. கடமை பாதையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் இருந்து 45-க்கும் மேலான பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனங்கள் இடம்பெற உள்ளன. இதில் 5,000-க்கும் அதிகமான கலைஞா்கள் பங்கேற்க உள்ளனா். தெலங்கானாவின் லம்பாடி, உத்தர பிரதேசத்தின் மயூா் ராஸ், மேற்கு வங்கத்தின் புருலியா சாவ் உள்ளிட்ட நடனங்கள் அணிவகுப்பில் இடம்பெற உள்ளன என்று தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com