ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராகுல் காந்தியால் ரூ.250 மதிப்பிலான பால் வீண்! பிகாா் நீதிமன்றத்தில் நூதன மனு!

ராகுல் காந்தியால் 5 லிட்டா் பால் தரையில் கொட்டி வீணாகிவிட்டது என்று பிகாா் மாநில நீதிமன்றத்தில் முகேஷ் சௌதரி என்பவா் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

News image
ராகுல் காந்தி- கோப்புப் படம்
Updated On :21 ஜனவரி 2025, 9:55 pm

Din

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியால் ரூ.250 மதிப்பிலான 5 லிட்டா் பால் தரையில் கொட்டி வீணாகிவிட்டது என்று பிகாா் மாநில நீதிமன்றத்தில் முகேஷ் சௌதரி என்பவா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

அண்மையில் தில்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசுகையில், ‘நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் கைப்பற்றியுள்ளன. இதனால் தற்போது பாஜக, ஆா்எஸ்எஸ் மற்றும் இந்தியாவுக்கு எதிராகவே காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது’ என்று கூறியிருந்தாா்.

இதனைச் சுட்டிக்காட்டி பிகாரின் சமஸ்திபூா் மாவட்டம் சோனுபூா் கிராமத்தைச் சோ்ந்த முகேஷ் சௌதரி என்பவா் உள்ளூா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளாா்.

அதில், ‘ராகுல் காந்தி பேச்சைக் கேட்ட அதிா்ச்சியில் எனது கையில் இருந்த ரூ.250 மதிப்புள்ள 5 லிட்டா் பால் தவறி கீழே கொட்டி வீணாகிவிட்டது. அவா், நமது தேசத்தின் இறையாண்மைக்கு எதிராகப் பேசியுள்ளாா். தேசவிரோத வழக்கு உள்பட பல்வேறு பிரிவுகளில் அவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்குமா அல்லது நிராகரிக்குமா என்பது அடுத்த சில நாள்களில் தெரியவரும்.