ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

யுஜிசியின் புதிய விதிகள்: கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்!

யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.

News image
- ENS
Updated On :21 ஜனவரி 2025, 6:24 am

DIN

யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் இன்று(செவ்வாய்க்கிழமை) தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும்வகையில் யுஜிசி வெளியிட்ட புதிய விதிமுறைகளுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

யுஜிசி இந்த விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஜன. 9 அன்று சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், யுஜிசியின் புதிய வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நேற்று(ஜன. 20) கடிதம் எழுதினார்.

இதனைத்தொடர்ந்து நாட்டில் பாஜக அல்லாத ஆளும் மாநில முதல்வர்களுக்கும் இதுகுறித்து கடிதம் எழுதினார்.

தில்லி, ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகம், கேரளம், பஞ்சாப், மேற்கு வங்காளம், தெலங்கானா சட்டப்பேரவைகளிலும் யுஜிசியின் புதிய வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், யுஜிசியின் புதிய விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் இன்று(ஜன. 21) தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 6 ஆம் தேதி யுஜிசி வெளியிட்ட வரைவு விதிமுறைகளை திரும்பப் பெற்று புதிய விதிமுறைகளை வெளியிடுமாறு மத்திய அரசிடம் கோரும் தீர்மானத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டப்பேரவையில் இன்று முன்மொழிந்தார்.

பல மாநில அரசுகள், கல்வி நிபுணர்களின் கருத்துகளுக்கு ஏற்ப கேரள சட்டப்பேரவையில் இந்த தீர்மானம் முன்மொழியப்படுவதாகவும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பல்கலைக்கழகங்கள் அந்தந்த மாநில சட்டப்பேரவைகளால் இயற்றப்பட்ட சட்டங்களின்படியே செயல்படுவதாகவும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.