மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜம்மு-காஷ்மீரில் 17 பேர் மர்ம மரணத்துக்குக் காரணம் விஷம்?

ஜம்மு-காஷ்மீரில் 17 பேர் மர்ம மரணத்துக்குக் காரணம் விஷம்தான் என கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்.

News image
- PTI
Updated On :24 ஜனவரி 2025, 11:26 am

DIN

ரஜெளரி/ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவத்தின் பின்னணியில் விஷம்தான் காரணமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய இணையளமைச்சர் ஜிதேந்திர சிங், கதுவாவில் இன்று பாலம் திறப்பு விழாவில் பங்கேற்ற போது இந்தத் தகவலை வெளியிட்டதாகவும், ஆனால், அந்த விஷம் எப்படிப்பட்டது என்பது குறித்து ஆய்வுகள் தொடர்வதாகவும் கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரஜெளரி மாவட்டத்தின் பதால் கிராமத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் மூன்று குடும்பங்களைச் சோ்ந்த 13 குழந்தைகள் உள்பட 17 போ் மா்மமாக உயிரிழந்தனா். மேலும் சிலா் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது தொடா்பாக, மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு, ரஜெளரியில் தொடா் விசாரணை மேற்கொண்டு வருகிறது. உயிரிழந்தவா்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் மாதிரிகள், பல்வேறு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த நிலையில்தான் மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவலில், 17 பேரின் மரணத்துக்கும் பின்னணியில் விஷம்தான் காரணமாக இருந்துள்ளது. இதைத் தவிர வேறு எந்த தொற்றுநோயோ, வைரஸ் காய்ச்சல், பூஞ்சை தொற்றோ காரணமல்ல. விஷம்தான் காரணம். ஆனால் அது எந்தவிதமான விஷம் என்று ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஏதேனும் உடல்நலக் குறைவு அல்லது தொற்றால், உடலுக்குள் நச்சு உருவாகிறதா என்பது கண்டறியப்பட்டு, ஒருவேளை அது உறுதி செய்யப்பட்டால், உடனடியாக அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இது செயற்கையாக வெளியிலிருந்தும் உடலுக்குள் சென்றதாக இருக்கலாம், உடலுக்குள் இயற்கையாக உருவானதாகவும் இருக்கலாம் என்கிறார்கள். இது பூச்சிக்கொல்லி மருந்து, பூச்சி அல்லது கொசு, கரப்பான்களைக் கொல்லும் காற்றில் அடிக்கப்படும் மருந்துகளாகக் கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

உயிரிழந்த 17 பேருக்கும் பொதுவான காரணியாக மூளை மற்றும் நரம்பு மண்டல சேதம் கண்டறியப்பட்டுள்ளது.

17 போ் உயிரிழப்பின் பின்னணியில் குற்றச் சதி ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய 50-க்கும் மேற்பட்டோரிடம் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.