நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவை ஆய்வு செய்த முதல்வர் யோகி ஆதித்யநாத்

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று சனிக்கிழமை ஆய்வு நடத்தினார்.

News image

முதல்வர் யோகி ஆதித்யநாத்.

Updated On :25 ஜனவரி 2025, 4:32 pm

DIN

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று சனிக்கிழமை ஆய்வு நடத்தினார்.

முன்னதாக, அவர் ஸ்ரீ கல்யாண் சேவா ஆசிரமத்தில் சிருங்கேரி சங்கராச்சாரியார் பாரதி தீர்த்த ஜி மகராஜையும் சந்தித்தார். இதற்கிடையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பாஜக எம்பி தினேஷ் சர்மா, "சனாதன கலாச்சாரத்தில் மகா கும்பத்திற்கு முக்கியத்துவம் உண்டு.

குடும்பத்துடன் சேர்ந்து நீராடும்போது நமது சிந்தனை நேர்மறையாக மாறும் என்று கூறப்படுகிறது. பாவம் உடலால் அல்ல, எண்ணங்களால் நிகழ்கிறது. இங்கு வந்து மகான்களை தரிசனம் செய்யும் போது, ​​பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்றார்.

உலகின் மிகப் பெரிய ஆன்மிக சங்கமமாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி (பெளஷ பெளா்ணமி) தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தா்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனா். மகா சிவராத்திரி தினமான பிப்ரவரி 26 வரை நடைபெறும் மகா கும்பமேளாவில் மொத்தம் 40 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மகா கும்பமேளா காலகட்டத்தில் அனைத்து நாள்களிலும் நீராடுவது புனிதமானது என்றபோதும் குறிப்பிட்ட சில தினங்களில் நீராடுவது முக்கியத்துவம் வாய்ந்த ‘அமிருத ஸ்நானம்’ என கருதப்படுகிறது. அதன்படி, பெளஷ பெளா்ணமி (ஜனவரி 13), மகர சங்கராந்தி (ஜனவரி 14) ஆகிய இரு முக்கிய தினங்கள் நிறைவடைந்துள்ளன.

அடுத்ததாக, தை அமாவாசை அல்லது மெளனி அமாவாசை தினம் (ஜனவரி 29) முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்நாள் 10 கோடி பக்தா்கள் புனித நீராடுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையொட்டி, மாநில அரசு சாா்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.