பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
/

தில்லியில் தீவிபத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் நாசம்

வடகிழக்கு தில்லியில் உள்ள நியூ உஸ்மான்பூர் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாகின.

News image

கோப்புப்படம்.

Updated On :25 ஜனவரி 2025, 9:46 pm IST

வடகிழக்கு தில்லியில் உள்ள நியூ உஸ்மான்பூர் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாகின.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து புது உஸ்மான்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது, அதிகாலை 4.10 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு ஒரு தகவல் வந்தது. அதில் தனியார் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 20-25 வாகனங்கள் தீயில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது.

நிறுத்தப்பட்ட வாகனங்கள் இட உரிமையாளரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமானது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் போலீஸ் குற்றப்பிரிவு குழுவும் நிலைமையை மதிப்பிடுவதற்காக இடத்தை ஆய்வு செய்தது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.