சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

சிறுபான்மையினருக்கு வழங்குவது சலுகை அல்ல; அடிப்படை உரிமை: ரிஜிஜுவுக்கு ஓவைசி பதில்

பெரும்பான்மையை விட சிறுபான்மையினருக்கு அதிக சலுகைகள் வழங்கும் ஒரே நாடு இந்தியா எனக் குறிப்பிட்டு கிரண் ரிஜிஜு பேசியிருந்தார்.

News image

அசாதுதீன் ஓவைசி / கிரண் ரிஜிஜு - கோப்புப் படங்கள்

Updated On :7 ஜூலை 2025, 9:00 pm IST

சிறுபான்மையினருக்கு அரசு வழங்குவது சலுகை அல்ல; அடிப்படை உரிமை என மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவடும் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையினரை விட அதிக பாதுகாப்பும் சலுகைகளும் சிறுபான்மையினருக்கு வழங்கும் ஒரே நாடு இந்தியாதான் என பாஜக மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியிருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓவைசி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஓவைசி குறிப்பிட்டுள்ளதாவது,

''நீங்கள் (கிரண் ரிஜிஜு) இந்தியக் குடியரசின் அமைச்சர்; மன்னர் அல்ல. ஜனநாயகரீதியான பதவியில் நீங்கள் இருக்கிறீர்கள். சிம்மாசனத்தில் அல்ல. சிறுபான்மையினரின் உரிமை சலுகை அல்ல; அவர்களுக்கான அடிப்படை உரிமை'' எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்திய சிறுபான்மையினர் இரண்டாம்தர குடிமக்களாகக் கூட கருதப்படுவதில்லை; அவர்கள் அகதிகளாகவே நடத்தப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ள ஓவைசி, ''ஹிந்து மத அறநிலையத் துறை வாரியங்களில் முஸ்லிம்கள் இடம்பெற முடியுமா? ஆனால், வக்ஃப் திருத்தச் சட்டத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இருக்கவும் பெரும்பான்மை பெறவும் வழிவகை செய்கிறது.

மெளலானா ஆசாத் ஃபெல்லோஷிப்பை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது. இது அனைத்தும் முஸ்லிம் மாணவர்கள் பலன் அடைகின்றனர் என்பதற்காகவே செய்யப்படுகிறது. மற்ற நாடுகளில் உள்ள மற்ற சிறுபான்மையினரை ஒப்பிட்டு நாங்கள் எதையும் கேட்கவில்லை. நாட்டில் பெரும்பான்மையினர் பெற்றுவரும் பலன்களையும் நாங்கள் கேட்கவில்லை. அரசியலமைப்பு என்ன நிர்ணயித்துள்ளதோ அதுவே எங்கள் கோரிக்கையாக உள்ளது. சமூகம், பொருளாதார மற்றும் அரசியல் நீதி கேட்கிறோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

AIMIM party leader and MP Asaduddin Owaisi has said that the government's provision of benefits to minorities is not a privilege; it is a fundamental right.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.