அமர்நாத்: 12 நாள்களில் 2.25 லட்சம் பேர் தரிசனம்!

6,388 பக்தர்கள் அடங்கிய குழு அமர்நாத்துக்கு இன்று புறப்பட்டுச் சென்றது..
Amarnath shrine
அமர்நாத்
Published on
Updated on
1 min read

தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலை 12 நாள்களில் 2.25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

ஜூலை 3-ஆம் தேதி அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மற்றும் காண்டர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் ஆகிய இரட்டை பாதைகளில் தொடங்கிய 38 நாள் வருடாந்திர யாத்திரை தொடங்கியதில் இருந்து இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குகைக் கோயிலைத் தரிசனம் செய்தனர். அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 9 ஆம் தேதி நிறைவடைகின்றது.

இந்த நிலையில், 6,388 பக்தர்கள் கொண்ட புதிய குழு அடிப்படை முகாமிலிருந்து இன்று புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1,308 பெண்கள் உள்பட 6,388 பக்தர்களைக் கொண்ட 14வது குழு பகவதி நகர் அடிப்படை முகாமிலிருந்து அதிகாலை 3:25 மணி முதல் அதிகாலை 4:15 மணி வரை 248 வாகனங்களில் புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

103 வாகனங்களில் 2,501 பக்தர்களுடன் காண்டர்பால் மாவட்டத்தில் 14 கிமீ பால்தால் பாதையிலிருந்து புறப்பட்டது, அதைத் தொடர்ந்து அனந்த்நாக் மாவட்டத்தில் 48 கிமீ பாரம்பரிய பஹல்காம் பாதை வழியாக யாத்திரை மேற்கொள்ளும் 145 வாகனங்களில் 3,887 பக்தர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

முன்னதாக, ஜூலை 2 ஆம் தேதி துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா முதல் குழுவைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்ததிலிருந்து மொத்தம் 95,439 பக்தர்கள் ஜம்மு அடிப்படை முகாமிலிருந்து பள்ளத்தாக்குக்குப் புறப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

A fresh batch of 6,388 pilgrims left a base camp here early Tuesday to offer prayers at the Amarnath cave shrine in south Kashmir Himalayas, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com