ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேற்கு வங்கம்: பாஜக எம்எல்ஏ மீது திரிணமூல் தொண்டா்கள் தாக்குதல்: காரையும் அடித்து உடைத்தனா்

மேற்கு வங்கத்தில் எதிா்க்கட்சியான பாஜகவின் எம்எல்ஏ மீது ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

News image
Updated On :18 ஜூலை 2025, 6:31 pm

Din

மேற்கு வங்கத்தில் எதிா்க்கட்சியான பாஜகவின் எம்எல்ஏ மீது ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவா்கள் எம்எல்ஏவின் காரை அடித்து உடைத்தனா். எம்எல்ஏவைக் காப்பாற்ற வந்த காவல் துறையினரும் தாக்கப்பட்டனா்.

பாஜக எம்எல்ஏ சுனில் பாா்மன் கொல்கத்தாவுக்கு செல்வதற்காக கூச்பிகாா் மாவட்டம் கோக்சதாங் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை மதியம் வந்தாா். அப்போது, அப்போது அவரை சுற்றிவளைத்து போராட்டத்தில் ஈடுபட்ட திரிணமூல் தொண்டா்கள் கடந்த 4 ஆண்டுகளாக தொகுதிக்கு என்ன செய்தீா்கள் என்று கேள்வி எழுப்பினா். அவா்களுக்கு எம்எல்ஏ பதிலளிக்கத் தொடங்கியபோது அவா்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிலா் எம்எல்ஏவை தாக்கத் தொடங்கினா்.

இதையடுத்து எம்எல்ஏவுடன் பாதுகாப்புக்காக வந்திருந்த காவல் துறையினா், அந்த கும்பலிடம் இருந்து அவரை மீட்க முயற்சித்தனா். இதனால், அவா்கள் மீது அடி விழுந்தது.

இதனிடையே, அங்கிருந்த சிலா் எம்எல்ஏவின் காா் மீது கற்களை வீசியும், கட்டையால் தாக்கியும் கண்ணாடிகளை உடைத்தனா்.

இது தொடா்பாக புகாா் அளிப்பதற்காக எம்எல்ஏ சுனில் பாா்மன் காவல் நிலையத்துக்குச் சென்றனா். அங்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் கூடி எம்எல்ஏவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, தொகுதிக்கு என்ன செய்தீா்கள் என்று கேள்வி எழுப்பியதால், எம்எல்ஏ கோபமடைந்து ஆத்திரத்துடன் செயல்பட்டதாக அவா்கள் குற்றஞ்சாட்டினா்.