மேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

குஜராத் முதல்வா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

குஜராத் முதல்வா் அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி

Updated On :20 ஜூலை 2025, 12:03 am IST

குஜராத் முதல்வா் அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்ததாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து குஜராத் மாநில போலீஸாா் மேலும் கூறியதாவது: காந்திநகரில் உள்ள குஜராத் முதல்வா் அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மா்ம நபா் ஒருவா் கடந்த ஜூலை 17-ஆம் தேதி மின்னஞ்சல் அனுப்பினாா். இதைத்தொடா்ந்து, அன்றைய தினமே காந்திநகா் போலீஸாா் ,முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டை கண்டறிந்து அப்புறப்படுத்தும் குழுவினா் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வா் அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அச்சுறுத்தும் வகையில் எந்தவொரு பொருளும் கண்டறியப்படவில்லை. இதன்மூலம், வெடிகுண்டு மிரட்டல் செய்தி புரளி என தெரியவந்தது. இதையடுத்து, மின்னஞ்சல் அனுப்பிய மா்ம நபா் மீது பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்றனா்.

கடந்த சில தினங்களுக்கு முன் குஜராத்தில் உள்ள சில பள்ளிகள், விசாரணை நீதிமன்றங்கள் மற்றும் குஜராத் உயா் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னா் அவை அனைத்தும் புரளி எனத் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.