ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், பலரும் ரீல்ஸ் எடுப்பது அதிகரித்திருக்கும் நிலையில், ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதாவது, பொது வெளியில், ஆடிப் பாடி விடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ள வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் பலரும் ஆபத்தான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
அதிலும், மக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோயில் போன்ற இடங்களில் ரீல்ஸ் எடுத்து பதிவிடுவது அதிகரித்துள்ளது.
சிலர், அதனையும் தாண்டி, ரயில் பெட்டிகள் மீது ஏறுவது, தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு விடியோ எடுப்பது, ரயில் வரும் வழியில், ரயிலைத் தொடும் தொலைவில் நின்றுகொண்டு விடியோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு, சில வேளைகளில் உயிர் பலிகளும் நேரிடுகின்றன.
இந்த நிலையில், ரயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுத்து பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வழக்கமாக, ரயில்நிலையங்களில் விடியோ எடுக்க அனுமதியில்லை. புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தற்போது ஏராளமானோர் ரீல்ஸ் எடுத்துப் பதவிட்டு வருவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் பயணிகளைக் கண்காணிக்கவும், ரீல்ஸ் எடுத்தால் அபராதமும், பயணிகளை அச்சுறுத்தும் வகையில் அல்லது உயிருக்கு ஆபத்தான வகையில் ரீல்ஸ் எடுத்தால் கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை தீவிரமாகக் கடைபிடிக்கப்படும் என்றும் தண்டவாளப் பகுதிகளிலும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகள் அறிவுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
Summary
Railways warns against taking reels at railway stations, fines or arrests if taken
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

5 குளிா்சாதன ரயில் பெட்டிகளுக்கு ஒரு பயணச்சீட்டு பரிசோதகா்: ரயில்வே அமைச்சா் அஸ்விணி வைஷ்ணவ்
மாணவா் தோ்தல்: பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை தில்லி பல்கலைக்கழகம் எச்சரிக்கை

கடற்கரையில் ரீல்ஸ் எடுக்க முயன்று அலையில் சிக்கிய காா்

அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ் எடுத்தால் சட்ட நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



