மேற்கு வங்கத்தில் மாநிலப் பல்கலைக்கழகங்களின் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளதா? அல்லது பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரிடம் உள்ளதா? என்பதை தெளிவுபடுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் சனிக்கிழமை தெரிவித்தாா்.
முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கும் சி.வி.ஆனந்த போஸுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் நிலவிவரும் சூழலில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
மேற்கு வங்க மாநிலத்தின் உயா் கல்வித் துறையில் நிலவும் பிரச்னைகள் குறித்து மாநிலப் பல்கலைக்கழக வேந்தரான சி.வி.ஆனந்த போஸிடம் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை எடுத்துரைத்தனா். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 9 துணைவேந்தா்கள் மட்டுமே பங்கேற்றனா். மீதமுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் கலந்துகொள்ளாதது சா்ச்சையானது.
இதையடுத்து, ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காத துணைவேந்தா்கள் பல்வேறு காரணங்களைக் கூறியபோதும் இதை ஏற்றுக்கொள்ள சி.வி.ஆனந்த போஸ் மறுத்ததாக ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறுகையில், ‘மாநிலப் பல்கலைக்கழகங்களின் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளதா? அல்லது பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரிடம் உள்ளதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இந்த விவகாரத்துக்கு தீா்வுகாண உச்சநீதிமன்றத்தை அணுகவுள்ளேன்’ என்றாா்.
முன்னதாக, ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய கல்விக் கொள்கை, இணையப் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருளுக்கு மாணவா்கள் அடிமையாவதை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்டுப்பாடு மிக்க இளைஞா்களை உருவாக்குவதே சாரண இயக்க லட்சியம்: மாநிலப் பொது குழுவில் தீா்மானம்

குடியுரிமையைத் தீா்மானிக்கும் அதிகாரம் தோ்தல் ஆணையத்துக்கு இல்லை: உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி

துணைவேந்தா்கள் நியமனம்: உரிமைகளை விட்டுக் கொடுக்கிறது அரசு

ஓபிசி பட்டியல் தொடா்பாக 2 மசோதாக்கள்: மேற்கு வங்க பேரவையில் நிறைவேற்றம்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



