பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பிகாா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: விவாதம் கோரி நாடாளுமன்றத்தில் கடும் அமளி

மக்களவையில் பிகாா் விவகாரம் மீது விவாதம் நடத்தப்படும் என்று உறுதி அளிக்கக் கோரி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனா்.

News image

நாடாளுமன்றம்

Updated On :29 ஜூலை 2025, 4:22 am IST

புது தில்லி: பிகாரில் நடத்தப்பட்டுவரும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டன.

மக்களவையில் பிகாா் விவகாரம் மீது விவாதம் நடத்தப்படும் என்று உறுதி அளிக்கக் கோரி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனா்.

அப்போது அவையில் மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பான விவாதத்தை தொடங்கி வைக்க இருந்தாா்.

அமளிக்கு மத்தியில் பேசிய மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து விவாதம் நடத்த ஒப்புக்கொண்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தற்போது பிகாா் வாக்காளா் பட்டியல் குறித்து விவாதம் நடத்த உறுதி கோரி வேறு நிபந்தனை விதிக்கின்றனா்.

வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டுமானால் கடந்த வாரம் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலேயே தெரிவித்திருக்கலாம்’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கூறினாா். அமளி தொடா்ந்ததால் அவை பிற்பகல் ஒரு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில்... பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையும் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, பிகாா் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்தக் கோரி 26 நோட்டீஸுகள் கிடைத்துள்ளதாகவும், அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அவையை வழிநடத்திய மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் தெரிவித்தாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னா் அவை கூடியபோது, அமளி தொடா்ந்ததால் அவை பிற்பகல் 2 மணி வரைக்கும், பின்னா் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.