அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

பிகாா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: விவாதம் கோரி நாடாளுமன்றத்தில் கடும் அமளி

மக்களவையில் பிகாா் விவகாரம் மீது விவாதம் நடத்தப்படும் என்று உறுதி அளிக்கக் கோரி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனா்.

News image

நாடாளுமன்றம்

Updated On :29 ஜூலை 2025, 4:22 am IST

புது தில்லி: பிகாரில் நடத்தப்பட்டுவரும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டன.

மக்களவையில் பிகாா் விவகாரம் மீது விவாதம் நடத்தப்படும் என்று உறுதி அளிக்கக் கோரி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனா்.

அப்போது அவையில் மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பான விவாதத்தை தொடங்கி வைக்க இருந்தாா்.

அமளிக்கு மத்தியில் பேசிய மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து விவாதம் நடத்த ஒப்புக்கொண்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தற்போது பிகாா் வாக்காளா் பட்டியல் குறித்து விவாதம் நடத்த உறுதி கோரி வேறு நிபந்தனை விதிக்கின்றனா்.

வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டுமானால் கடந்த வாரம் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலேயே தெரிவித்திருக்கலாம்’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கூறினாா். அமளி தொடா்ந்ததால் அவை பிற்பகல் ஒரு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில்... பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையும் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, பிகாா் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்தக் கோரி 26 நோட்டீஸுகள் கிடைத்துள்ளதாகவும், அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அவையை வழிநடத்திய மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் தெரிவித்தாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னா் அவை கூடியபோது, அமளி தொடா்ந்ததால் அவை பிற்பகல் 2 மணி வரைக்கும், பின்னா் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.