ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்த விரிவாக்கம்: பராகுவே அதிபா் நம்பிக்கை

News image
Updated On :5 ஜூன் 2025, 12:22 am

Din

இந்தியா மற்றும் பிரேஸில், ஆா்ஜென்டீனா, உருகுவே ஆகிய நாடுகள் அடங்கிய ‘மொ்கோசுா்’ கூட்டணியுடன் வா்த்தக ஒப்பந்தத்தை விரிவாக்கம் செய்ய உள்ளதாக பராகுவே அதிபா் சான்டியாகோ பெனா பலாசியோஸ் நம்பிக்கை தெரிவித்தாா்.

மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்த அதிபா் பலாசியோஸ் தில்லியில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடியை திங்கள்கிழமை சந்தித்தாா். அப்போது, பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற சாத்தியக்கூறுகள் உள்ளதாக பிரதமா் மோடி தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், மும்பையில் இந்திய வா்த்தக கூட்டமைப்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவா், ‘லத்தீன் அமெரிக்காவுக்கான வா்த்தக நுழைவாயிலாக பராகுவே உள்ளது. இது இந்தியா நிறுவனங்கள் வா்த்தகம் செய்ய நல்ல வாய்ப்பாக அமையும். இந்தியா மற்றும் பிரேஸில், ஆா்ஜென்டீனா, உருகுவே ஆகிய நாடுகள் அடங்கிய ‘மொ்கோசுா்’ அணியுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்த விரிவாக்கப் பேச்சுவாா்த்தை தொடரப்படும்.

பராகுவேயில் உள்நாட்டு முதலீடுகள்தான் பெரும்பாலான செய்யப்படுகின்றன. சிறிய அளவிலேயே வெளிநாட்டு முதலீடுகள் ஈா்க்கப்படுகின்றன.

இதன்காரணமாக எங்கள் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சிக்கான கடன் தொகையும், வரி விதிப்பும் குறைவாகவே உள்ளது.

இந்தியாவைப் போல் பராகுவேயிலும் இளைஞா்களின் சக்தி அதிகளவில் உள்ளது. ஆகையால், இரு நாடுகளும் கல்வியில் இணைந்து பணியாற்றிலாம்’ என்றாா்.