கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

புணேவில் டெமு ரயிலில் திடீர் தீவிபத்து

புணேவில் டாண்ட்-புணே டெமு ரயிலில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் பீதியடைந்தனர்.

News image

கோப்புப்படம்.

Updated On :16 ஜூன் 2025, 7:32 am

புணேவில் டாண்ட்-புணே டெமு ரயிலில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் பீதியடைந்தனர்.

புணே மாவட்டத்தில் உள்ள யிவா அருகே இந்த சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக 55 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ரயில்வே செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

முதற்கட்ட தகவலின்படி, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் புகைபிடித்த பிறகு ரயிலின் குப்பைத் தொட்டியில் 'பீடி'யை வீசியதாகக் கூறப்படுகிறது. இது தீ விபத்துக்கு வழிவகுத்தது என்று போலீஸ் அதிகாரி கூறினார்.

"இந்த சம்பவம் காலை 8 மணியளவில் நடந்தது. குப்பைத் தொட்டியில் காகிதங்கள் மற்றும் பிற குப்பைகள் இருந்தன. தீப்பிடித்ததும் கழிப்பறையிலிருந்து புகை கிளம்பியது. அது பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

அந்த பெட்டியில் ஒரு சில பயணிகள் மட்டுமே இருந்தனர் என்றும் தீ விரைவாக அணைக்கப்பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.