புணேவில் டெமு ரயிலில் திடீர் தீவிபத்து

புணேவில் டாண்ட்-புணே டெமு ரயிலில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் பீதியடைந்தனர்.
train
கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

புணேவில் டாண்ட்-புணே டெமு ரயிலில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் பீதியடைந்தனர்.

புணே மாவட்டத்தில் உள்ள யிவா அருகே இந்த சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக 55 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ரயில்வே செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

முதற்கட்ட தகவலின்படி, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் புகைபிடித்த பிறகு ரயிலின் குப்பைத் தொட்டியில் 'பீடி'யை வீசியதாகக் கூறப்படுகிறது. இது தீ விபத்துக்கு வழிவகுத்தது என்று போலீஸ் அதிகாரி கூறினார்.

கேரளத்தில் கனமழைக்கு 4 பேர் பலி!

"இந்த சம்பவம் காலை 8 மணியளவில் நடந்தது. குப்பைத் தொட்டியில் காகிதங்கள் மற்றும் பிற குப்பைகள் இருந்தன. தீப்பிடித்ததும் கழிப்பறையிலிருந்து புகை கிளம்பியது. அது பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

அந்த பெட்டியில் ஒரு சில பயணிகள் மட்டுமே இருந்தனர் என்றும் தீ விரைவாக அணைக்கப்பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com