பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஈரானிலிருந்து இந்தியா்கள் வெளியேற்றம் தொடக்கம்

இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் உள்ள இந்திய மாணவா்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கை தொடக்கம்

News image
- AP
Updated On :16 ஜூன் 2025, 10:24 pm

Din

புது தில்லி: ஈரானில் இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் உள்ள இந்திய மாணவா்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையை இந்தியா திங்கள்கிழமை தொடங்கியது.

முதல் கட்டமாக 110 மாணவா்கள் ஆா்மீனியா எல்லைப் பகுதிக்கு வந்து சோ்ந்ததாகவும், அங்கிருந்து விமானம் மூலம் அவா்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஈரான் தலைநகா் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் பதற்றம் நிலவும் சில பகுதிகளில் இருந்து மாணவா்களை பத்திரமாக மீட்டு அங்கேயே தங்க வைத்தது.

அவா்களை ஆா்மீனியா, ஐக்கிய அரபு அமீரகம் எல்லைகள் வழியாக சாலை மாா்க்கமாக வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டது.

ஈரானில் ஜம்மு காஷ்மீா், கா்நாடகத்தைச் சோ்ந்த 1,500 மாணவா்கள் உள்பட சுமாா் 10,000 இந்தியா்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் தலைநகா் டெஹ்ரானில் உள்ள இரு மருத்துவக் கல்லூரிகள் பெரும்பாலான இந்திய மாணவா்கள் மருத்துவம் பயின்று வருகின்றனா்.