நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பிகாரில் புதியதாக 6 விமான நிலையங்கள்! அமைச்சரவை ஒப்புதல்!

பிகாரில் புதியதாக 6 விமான நிலையங்கள் அமைக்க, மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

News image

பிகார் முதல்வர் நிதிஷ் குமார் - பிடிஐ

Updated On :17 ஜூன் 2025, 4:54 pm IST

பிகாரில் புதியதாக 6 நகரங்களில் விமான நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிகாரில் புதியதாக 6 நகரங்களில் விமான நிலையம் அமைப்பதற்கு, மாநில விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் இடையிலான புரிதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை இன்று (ஜூன் 17) ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி, பிகாரின் மதுபானி, பிர்பூர், முங்கேர், வால்மீகி நகர், முஸாஃபர்ப்பூர் மற்றும் சாஹர்ஸா ஆகிய நகரங்களில் புதியதாக விமான நிலையம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய திட்டத்தின் அடிப்படையில், ஒவ்வொரு விமான நிலையத்தின் வளர்ச்சிக்காக ரூ.25 கோடி என மொத்தம் ரூ.150 கோடி ஒதுக்கப்படுவதாக, மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். சித்தார்த் கூறியுள்ளார்.

பிகாரில், சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் இந்தப் புதிய வளர்ச்சித் திட்டத்துக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.