ஒடிஸாவில் 10 இளைஞர்களால் கல்லூரி மாணவியொருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 10 பேரும் இன்று(ஜூன் 17) கைது செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
ஒடிஸாவின் கஞ்சம் மாவட்டத்தில் 20 வயது நிரம்பிய இளம்பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கோபால்பூர் கடற்கரையில் தனது ஆண் நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மது அருந்திவிட்டு திரிந்த 10 பேர் கொண்ட கும்பல் மாணவியின் நண்பரை தாக்கி கட்டிப்போட்டு விட்டு, அந்த மாணவியை தனியாக இழுத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் இன்று 10 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிந்து கோபால்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த 10 பேரில், 7 பேர் இளம்பெண்ணைச் சுற்றி அரணாக நின்று கொண்டதாகவும், அதன்பின் மூன்று இளைஞர்கள் சேர்ந்து அந்த பெண்ணை பல முறை சீரழித்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த கும்பலில் இருந்த 4 பேர், 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் என்பது வேதனைக்குரியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீஞ்சூா் மாணவி பாலியல் வன்கொடுமை: எடப்பாடி பழனிசாமி, தலைவா்கள் கண்டனம்

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! இளைஞர் கைது!
14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: தாயின் நண்பா் கைது

'நான்தான் கடவுள்' பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார்! மகாராஷ்டிரத்தில் அதிர்ச்சி!!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


