ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

உ.பி: அக்பர்பூர் பேருந்து நிலையம் பெயர் மாற்றம்! முதல்வர் அறிவிப்பு!

உத்தரப் பிரதேசத்தின் அக்பர்பூர் பேருந்து நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

Updated On :17 ஜூன் 2025, 12:16 pm IST

உத்தரப் பிரதேசத்தின் அக்பர்பூர் பேருந்து நிலையத்தின் பெயர் ஷ்ராவன் தம் பேருந்து நிலையம் என மாற்றப்படுவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 16) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத், அங்குள்ள அக்பர்பூர் பேருந்து நிலையத்தின் பெயர் ஷ்ராவன் தம் பேருந்து நிலையம் என மாற்றப்படுவதாக அறிவித்தார்.

இந்தப் பெயரானது, ராமாயணத்தில் வரும் ஷ்ராவன் குமார் எனும் கதாபாத்திரத்தின் புகழைப் போற்றும் விதமாகச் சூட்டப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மறைந்த ஜெய்ராம் வர்மா என்பவரின் நினைவாக, தண்டா பேருந்து நிலையத்தின் பெயரும் ஜெய்ராம் வர்மா பேருந்து நிலையம் என மாற்றப்பட்டுள்ளது.

அம்பேத்கர் நகர் மாவட்டத்துக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், சுமார் ரூ. 1,184 கோடி மதிப்பிலான 194 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், அந்த நிகழ்ச்சியில் 102 திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், 92 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.