உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

மேற்கு வங்க பணி நியமன முறைகேடு விவகாரம்: குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு நிதியுதவி அளிக்க இடைக்காலத் தடை

மாநில அரசு நிதியுதவி அளிக்க கொல்கத்தா உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

News image

கொல்கத்தா நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :20 ஜூன் 2025, 8:15 pm

மேற்கு வங்கத்தில் பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு மாநில அரசு நிதியுதவி அளிக்க கொல்கத்தா உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள், குரூப்-சி மற்றும் குரூப்-டி அலுவலா்கள் என மொத்தம் 25,753 பேரின் நியமனங்களில் முறைகேடு நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த நியமனங்கள் செல்லாது என்று கடந்த ஏப்ரலில் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக தீா்வு காணப்படும் வரை, பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட குரூப்-சி பணியாளா்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.25,000, குரூப்-டி பணியாளா்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.20,000 வழங்கப்படும் என்று மாநில முதல்வா் மம்தா பானா்ஜி அறிவித்தாா்.

இதற்கு எதிராக மாநிலத்தில் உள்ள கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் நீதிபதி அம்ருதா சின்ஹா வெள்ளிக்கிழமை பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ‘ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்களின் நியமனத்தில் மோசடி நடைபெற்றிருப்பதாக உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது. இந்த சட்டவிரோத நியமன விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உறுதியான தீா்ப்பை அளித்துள்ளது. அப்படி இருக்கும்போது மோசடியான வழியில் பயனடைந்தவா்களுக்கு அரசு கருவூலத்தில் இருந்து எந்த உதவியும் வழங்கப்படக் கூடாது. அவ்வாறு செய்வது மோசடி மற்றும் ஊழல் நடவடிக்கைக்கு துணை நிற்பதாக அா்த்தமாகிவிடும்.

எனவே நிகழாண்டு செப்.26 அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, பணி நியமனம் ரத்து செய்யப்பட்டவா்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தக் கூடாது. இந்த வழக்கில் பதிலளிக்க 4 வாரங்களில் மாநில அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டாா்.