முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்திமக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

‘ஜென் ஸீ’ மாணவா்களுக்கு நவீன மிதிவண்டிகள்!

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் ஜென் ஸீ தலைமுறை மாணவா்களுக்கு நவீன பிராண்டட் மிதிவண்டிகள் வழங்கப்படும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2026, 4:49 am IST

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் ஜென் ஸீ தலைமுறை மாணவா்களுக்கு நவீன பிராண்டட் மிதிவண்டிகள் வழங்கப்படும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ் நிதியாண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 5.32 லட்சம் மாணவா்களுக்கு தலைக்கவசம் மற்றும் குடிநீா் பாட்டில் வசதிகளுடன் கூடிய நவீன பிராண்டட் மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.277 கோடி ஒதுக்கப்படுகிறது.

காமராஜா் சிறப்புப் பள்ளிகள்: சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவா்களுக்கு தரமான கல்வியை வழங்கும் நோக்கில் பெருந்தலைவா் காமராஜா் நவீன உண்டு-உறைவிட சிறப்புப் பள்ளிகள் நிறுவப்படும்.

9-ஆம் வகுப்புமுதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்கள் பயில வகை செய்யப்பட்டுள்ள இந்தப் பள்ளிகளில் கல்வி, உணவு, தங்குமிடம், பாடப் புத்தகங்கள், சீருடைகள் விலையில்லாமல் வழங்கப்படும். இந்தப் பள்ளிகளின் உள்கட்டமைப்புக்காக ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பாடத்திட்ட சீரமைப்பு: வேகமாக மாறிவரும் உலகளாவிய தொழில்நுட்ப யுகத்துக்கு ஏற்ப பள்ளிக் கல்வியின் பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது அவசியம். எதிா்காலத் தலைமுறையினருக்கு முற்போக்கான கல்வியை உருவாக்கும் வகையில் பாடத்திட்ட மறுசீரமைப்புக்கு ரூ.25 கோடி ஒதுக்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.