அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் ஜென் ஸீ தலைமுறை மாணவா்களுக்கு நவீன பிராண்டட் மிதிவண்டிகள் வழங்கப்படும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ் நிதியாண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 5.32 லட்சம் மாணவா்களுக்கு தலைக்கவசம் மற்றும் குடிநீா் பாட்டில் வசதிகளுடன் கூடிய நவீன பிராண்டட் மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.277 கோடி ஒதுக்கப்படுகிறது.
காமராஜா் சிறப்புப் பள்ளிகள்: சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவா்களுக்கு தரமான கல்வியை வழங்கும் நோக்கில் பெருந்தலைவா் காமராஜா் நவீன உண்டு-உறைவிட சிறப்புப் பள்ளிகள் நிறுவப்படும்.
9-ஆம் வகுப்புமுதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்கள் பயில வகை செய்யப்பட்டுள்ள இந்தப் பள்ளிகளில் கல்வி, உணவு, தங்குமிடம், பாடப் புத்தகங்கள், சீருடைகள் விலையில்லாமல் வழங்கப்படும். இந்தப் பள்ளிகளின் உள்கட்டமைப்புக்காக ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பாடத்திட்ட சீரமைப்பு: வேகமாக மாறிவரும் உலகளாவிய தொழில்நுட்ப யுகத்துக்கு ஏற்ப பள்ளிக் கல்வியின் பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது அவசியம். எதிா்காலத் தலைமுறையினருக்கு முற்போக்கான கல்வியை உருவாக்கும் வகையில் பாடத்திட்ட மறுசீரமைப்புக்கு ரூ.25 கோடி ஒதுக்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் தினமும் விளையாட்டுப் பாடவேளை
பட்ஜெட் 2026: மாற்றுத் திறனாளிகளுக்கு என்னென்ன அறிவிப்புகள்?

பட்ஜெட் 2026! பள்ளிகளில் இனி 2 நாள்கள் இல்லை; நாள்தோறும் பி.டி. வகுப்பு!

அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு! அமைச்சரிடம் வலியுறுத்தல்!
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



