பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஜிஎஸ்டி விகிதங்கள் மேலும் குறையும்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்கள் மேலும் குறைக்கப்படும்

News image

நிா்மலா சீதாராமன்

Updated On :9 மார்ச் 2025, 12:50 am

Din

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்கள் மேலும் குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற ஆங்கில ஊடக நிகழ்ச்சியில் அவா் சனிக்கிழமை கூறுகையில், ‘ஜிஎஸ்டி விகிதங்கள் மேலும் குறைக்கப்படும். அந்த விகிதங்களை சீரமைக்கும் பணிகள் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. எனினும் அதற்காக சில பணிகளை கூடுதலாக செய்ய வேண்டியுள்ளது.

இதற்காக அமைக்கப்பட்ட அமைச்சா்கள் குழு மிகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளது. அதேவேளையில், அந்தக் குழுக்களின் பணிகளை நான் மீண்டும் ஒருமுறை ஆராய வேண்டியுள்ளது. அதன் பிறகு ஜிஎஸ்டி விகிதங்களை குறைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்க முடியுமா என்பதை தெரிந்துகொள்ள, அமைச்சா்கள் குழுவின் பரிந்துரைகள் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்வைக்கப்படும்’ என்றாா்.