டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

வாழ்க்கையின் நோக்கத்தை அறிய உதவியது ஆர்.எஸ்.எஸ்: மோடி

வாழ்க்கையின் நோக்கத்தை அறிய ஆர்.எஸ்.எஸ். தனக்கு உதவியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

News image

பிரதமர் நரேந்திர மோடி

Updated On :16 மார்ச் 2025, 7:30 pm IST

வாழ்க்கையின் நோக்கத்தை அறிய ஆர்.எஸ்.எஸ். தனக்கு உதவியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

செய்யறிவு தொழில்நுட்ப ஆய்வாளர் லெக்ஸ் ஃபிரிட்மேன் உடனான நேர்காணலின்போது ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஏஐ குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,

''ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) மூலம் வாழ்க்கையின் நோக்கத்தை அறிய முடிந்தது. அங்கு சில நாள்களை கழித்ததை பாக்கியமாகக் கருதுகிறேன். அது மிகவும் வலுவான ஆன்மிக அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தது. ஒழுக்கம் மற்றும் வாழ்க்கையின் மதிப்பீடுகளை அங்கு நான் அறிந்துகொண்டேன்.

இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஊழியர்கள் என பல்வேறுதரப்பினரின் வாழ்க்கையிலும் இது பங்காற்றுகிறது. பொது வாழ்க்கையின் திசைதிருப்பல்களில் இருந்து விலகி ஒழுக்கம் மற்றும் ஆன்மிகத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டது ஆர்.எஸ்.எஸ்; அங்கு வாழ்க்கையின் சில பகுதிகளைக் கழித்ததை அதிருஷ்டமாகப் பார்க்கிறேன்'' எனக் குறிப்பிட்டார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேரும்போது தனக்கு 8 வயது என்றும் இந்து தேசியம் என்ற கருத்து வேரூன்றியது அங்குதான் எனவும் சுட்டிக்காட்டினார்.

அரசியல் வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்விலும் ஆர்.எஸ்.எஸ். ஏற்படுத்திய தாக்கம் குறித்து லெக்ஸ் ஃபிரிட்மேன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மோடி, ''எங்கள் கிராமத்தில் ஆர்.எஸ்.எஸ். கிளை உள்ளது. அங்கு நாங்கள் விளையாடுவோம்; தேசப் பற்று பாடல்களைப் பாடுவோம். அந்தப் பாடல்கள் ஏதோவொரு வகையில் என்னில் ஆழமாகப் படிந்துவிட்டது.

அது எனக்குள் ஏற்படுத்திய மாற்றங்களால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அங்கமாக என்னை மாற்றியது. அங்கு நாங்கள் கற்றுக்கொண்ட மிகுந்த மதிப்புமிக்க செயல் என்னவென்றால், நீங்கள் எதைச் செய்தாலும், அதனை ஒரு நோக்கத்துக்காகவே செய்ய வேண்டும் என்பதுதான். அதனை அரசியல் வாழ்க்கையிலும் கடைபிடிக்கிறேன்'' எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.