எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

சமூக வலைதளத்தில் முஸ்லிம்கள் பற்றி சர்ச்சை பதிவு: ம.பி.யில் பதற்றம்... ஒருவர் கைது!

மத்தியப் பிரதேசத்தில் ஏற்பட்ட சம்பவம் குறித்து...

News image

போராட்டம் நடைபெற்ற இடத்தில் குவிந்த காவல்துறையினர்.

Updated On :19 மார்ச் 2025, 8:56 pm IST

மத்தியப் பிரதேசத்தில் சமூக வலைதளத்தில் முஸ்லிம்கள் பற்றி சர்ச்சையாகப் பதிவிட்ட நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பர்ஹான்பூர் நகரைச் சேர்ந்த நபர் இன்ஸ்டாகிராமில் முஸ்லிம்கள் தொடர்பான சர்ச்சையான கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு 10.30 மணியளவில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இன்ஸ்டாகிராமில் தவறாகப் பதிவிட்ட நபரைக் கைது செய்யக்கோரி அங்குள்ள சந்தைப் பகுதியில் கூடி கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

சம்பவம் குறித்து அறிந்ததும், உள்ளூர் போலீசார் இரவு 11.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கும்பலைக் கலைக்க முயன்றனர். இருப்பினும், கூட்டம் கலையவில்லை.

இதனைத் தொடர்ந்து, மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கில் பதிவிட்ட தேவேஷ் தலால் (21) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.

“வழக்குப்பதிவு செய்யப்படுவதற்கு முன்பு, போராட்டக்காரர்கள் காவல் நிலையத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். நாங்கள் அவர்களுடன் இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்தோம். அதன் பிறகே போராட்டம் முடிவுக்கு வந்தது. இதுபோன்ற பதிவுகளின் மூலம் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கும் எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்” என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

சரியான நேரத்தில் காவல்துறையினர் இந்த சம்பவத்தில் தலையிடாமல் இருந்திருந்தால் இது வகுப்புவாதக் கலவரத்திற்கு வித்திட்டிருக்கும் என அந்தப் பகுதிவாசிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.