தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

பட்டியலினத்தவர் மீது காங்கிரஸ் விரோதம்: பாஜக குற்றச்சாட்டு

பட்டியலினத்தவர்கள் மீது விரோத மனநிலையை காங்கிரஸ் கொண்டிருப்பதாக பாஜக தலைவர் சி. ஆர். கேசவன் கூறினார்.

News image

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Updated On :21 மார்ச் 2025, 5:05 pm IST

பட்டியலினத்தவர்கள் மீது விரோத மனநிலையை காங்கிரஸ் கொண்டிருப்பதாக பாஜக தலைவர் சி. ஆர். கேசவன் கூறினார்.

நாட்டில் இன்றளவிலும் சமத்துவமின்மை இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் பதிவுக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் சி. ஆர். கேசவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது ``தங்கள் கடின உழைப்பு, முழு அர்ப்பணிப்பு மூலம் பொது வாழ்க்கையில் முன்னேறிய எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகங்களைச் சேர்ந்த திறமையான தலைவர்களை நிலப்பிரபுத்துவ மனநிலையைக் கொண்ட வம்சாவளி காங்கிரஸ் எப்போதும் வரலாற்றுரீதியாக துஷ்பிரயோகம் செய்து அவமதித்து வருகிறது.

காங்கிரஸ் கட்சி எப்போதும் தலித் விரோத மனநிலையைத்தான் கொண்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) முன்னாள் தலைவரும் பொருளாதார நிபுணருமான சுக்தியோ தோரட்டுடன், சமத்துவமின்மை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாடிய விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விடியோவில் அவர் தெரிவித்ததாவது, ``மகத் சத்தியாகிரகம், நிர்வாகம், கல்வி, அதிகாரத்துவம், தலித்துகளின் உரிமைப் போராட்டம் குறித்து விரிவாக உரையாடினோம். 1927 ஆம் ஆண்டில் மார்ச் 20-ல் மகத் சத்தியாகிரகத்தை அம்பேத்கர் நடத்தினார். இது தண்ணீர் உரிமைக்கான போராட்டம் மட்டுமல்ல, சமத்துவம் மற்றும் மரியாதைக்கானதாகவும் இருந்தது. 98 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய உரிமைக்கான போராட்டம் இன்றும் நடந்து வருகிறது.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது சமத்துவமின்மை, பாகுபாடு பற்றிய உண்மையை வெளிப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாகும். இருப்பினும், அம்பேத்கரின் கனவு இன்னும் முழுமையடையவில்லை.

அவரது போராட்டம் கடந்த காலத்திற்கானது மட்டுமல்ல, இன்றைக்கும் தேவையானதுகூட. நாங்கள் அதை முழு பலத்துடன் போராடுவோம்’’ என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.