புது தில்லி: நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை சீனாவிலிருந்து 8.47 லட்சம் டன் உரத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
இது குறித்து மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த பிப்ரவரி மாதம் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் சீனாவில் இருந்து 8.47 லட்சம் டன் டை-அம்மோனியம் பாஸ்பேட் உரம் இறக்குமதி செய்யப்பட்டது.
இந்த காலகட்டத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த டை-அம்மோனியம் பாஸ்பேட் இறக்குமதியான 44.19 லட்சம் டன்னில் சீனா 19.17 சதவீதம் பங்கு வகிக்கிறது.
2023 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி வரையிலான முந்தைய நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் இந்தியா மேற்கொண்ட 55.67 லட்சம் டன் டை-அம்மோனியம் பாஸ்பேட் இறக்குமதியில் சீனா 40 சதவீதம் (22.28 லட்சம் டன்கள்) பங்கு வகித்தது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
யூரியாவுக்குப் பிறகு இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் உரமான டை-அம்மோனியம் பாஸ்பேட், ரஷியா, சவூதி அரேபியா, மொராக்கோ, ஜோா்டான் ஆகிய நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது.
தொடர்புடையது
ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என மோடி சொன்னது ஏன்? சாத்தியமாகுமா?

கடலூா் மாவட்டத்துக்கு ரயில் மூலம் 1,228 மெ.டன் யூரியா வருகை

குறுவை சாகுபடி: தஞ்சைக்கு 1,336 டன் உரம் வருகை

தஞ்சாவூருக்கு 1,250 டன் உரம்
விடியோக்கள்

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை

