நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சீனாவில் இருந்து 8 லட்சம் டன் உரம் இறக்குமதி

நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை சீனாவிலிருந்து 8.47 லட்சம் டன் உரத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

News image

டை-அம்மோனியம் பாஸ்பேட் உரம்

Updated On :24 மார்ச் 2025, 10:43 pm

Din

புது தில்லி: நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை சீனாவிலிருந்து 8.47 லட்சம் டன் உரத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

இது குறித்து மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த பிப்ரவரி மாதம் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் சீனாவில் இருந்து 8.47 லட்சம் டன் டை-அம்மோனியம் பாஸ்பேட் உரம் இறக்குமதி செய்யப்பட்டது.

இந்த காலகட்டத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த டை-அம்மோனியம் பாஸ்பேட் இறக்குமதியான 44.19 லட்சம் டன்னில் சீனா 19.17 சதவீதம் பங்கு வகிக்கிறது.

2023 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி வரையிலான முந்தைய நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் இந்தியா மேற்கொண்ட 55.67 லட்சம் டன் டை-அம்மோனியம் பாஸ்பேட் இறக்குமதியில் சீனா 40 சதவீதம் (22.28 லட்சம் டன்கள்) பங்கு வகித்தது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

யூரியாவுக்குப் பிறகு இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் உரமான டை-அம்மோனியம் பாஸ்பேட், ரஷியா, சவூதி அரேபியா, மொராக்கோ, ஜோா்டான் ஆகிய நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது.