திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுகிறது: ராகுல்

ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படும் மக்களவை பற்றி ராகுல் கூறுவது..

News image

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

Updated On :26 மார்ச் 2025, 3:26 pm IST

மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும், நாடாளுமன்ற அவையில் தனக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவை நடவடிக்கைகள் வழக்கம்போல் இன்று கூடியது. அப்போது தனக்குப் பேசுவதற்கு வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்படுவதாகவும், ஜனநாயகமற்ற முறையில் அவை நடத்தப்படும் அவையில் தன்னைப் பற்றி ஆதாரமற்ற கருத்துக்களை அவைத்தலைவர் ஓம் பிர்லா தெரிவித்ததாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, அவையின் கண்ணியத்தை நிலைநிறுத்த உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை விதிகளைப் பின்பற்றுமாறு ஓம் பிர்லா கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து ராகுல் காந்தி இந்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அவைத்தலைவர் இந்தக் கருத்தைச் சொன்னதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

கடந்த வாரமும், அவைத்தலைவர் தன்னைப் பற்றிக் கருத்து தெரிவித்ததாகவும், தன்னை ஒரு வார்த்தை கூட பேச அனுமதிக்கவில்லை, அவையை ஒத்திவைத்துவிட்டு எழுந்து சென்றுவிட்டார் என்று ராகுல் கூறினார்.

மக்களவை முன்னாள் காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய்,கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் மக்களவையில் கட்சியின் கொறடா மாணிக்கம் தாகூர் உள்பட சுமார் 70 காங்கிரஸ் எம்பிக்கள், மக்களவை தலைவரான ஓம் பிர்லாவை சந்தித்து ராகுல்காந்தி பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுவதற்கு எதிராகக் கேள்வி எழுப்பினர்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி,

எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதிக்கப்பட வேண்டும் என்று மரபு உள்ளதாகவும், ஆனால் தான் பேச எழுந்திருக்கும் போதெல்லாம் பேச அனுமதிக்கப்படுவதில்லை.

மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுகிறது. கடந்த 7-8 நாள்களாகவே இப்படிதான் நடைபெறுகிறது.

கடந்த வாரம் மகா கும்பமேளா குறித்து பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை வெளியிட்ட பிறகு, தனக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது. கும்பமேளா நடைபெற்றது நல்லது. ஆனால் வேலையின்மை பற்றி தான் பேச விரும்புகிறேன்.

அவைத்தலைவருக்கு என்ன சிந்தனை அணுகுமுறை இருக்கிறது என்று தெரியவில்லை, ஆனால் எங்களுக்குப் பேச அனுமதி மறுக்கப்படுகிறது என்பது மட்டும் உறுதி என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.