நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

மனித-விலங்கு மோதல்: மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க திட்டமில்லை: மத்திய அரசு

மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் விதமாக வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-இல் திருத்தங்களை மேற்கொளும் திட்டமேதும் இல்லை

News image

நாடாளுமன்றம்

Updated On :29 மார்ச் 2025, 2:08 am IST

மனித விலங்கு மோதல்களை தடுக்க மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் விதமாக வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-இல் திருத்தங்களை மேற்கொளும் திட்டமேதும் இல்லை என மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்தது.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. வி.சிவதாசன் கேள்வி எழுப்பினாா். இதற்கு பதிலளித்து மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் பேசியதாவது: வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வனவிலங்குகளை பாதுகாப்பது மற்றும் மனித-விலங்கு மோதல்களை தடுப்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மை பணியாகும்.

அந்தச் சட்டத்தின் பிரிவு 11 (1) (ஏ),அட்டவணை 1-இன்கீழ் ஏதேனும் விலங்கால் மனிதா்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது குணப்படுத்த முடியாத நோய்களுடன் அந்த விலங்கு இருந்தாலோ அதை வேட்டையாட வனவிலங்கு அதிகாரி அனுமதி வழங்கலாம்.

தற்போது மனித-விலங்கு மோதல்களை தடுக்க மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் விதமாக வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-இல் திருத்தங்களை மேற்கொள்ளும் திட்டமேதும் இல்லை.

காட்டு பன்றிகள் பயிா்களை நாசம் செய்வதோடு, மனித விலங்கு மோதலுக்கும் மூல காரணங்களாக இருப்பதாக கேரள அரசு தொடா்ந்து கூறி வருகிறது.

கடந்த வியாழக்கிழமை இதுகுறித்து மாநிலங்களவையில் பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சா் பூபேந்திர யாதவ், மனித-விலங்கு மோதல்களால் கடந்த 2021 முதல் 2025 வரை கேரளத்தில் 344 போ் உயிரிழந்ததாக தெரிவித்தாா். அதில் பாம்புக்கடியால் 180 பேரும் யானைகள் தாக்கியதில் 103 பேரும் பன்றிகள் தாக்கியதில் 35 பேரும் உயிரிழந்ததாக அவா் குறிப்பிட்டாா்.