ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மனித-விலங்கு மோதல்: மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க திட்டமில்லை: மத்திய அரசு

மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் விதமாக வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-இல் திருத்தங்களை மேற்கொளும் திட்டமேதும் இல்லை

News image

நாடாளுமன்றம்

Updated On :28 மார்ச் 2025, 8:38 pm

Din

மனித விலங்கு மோதல்களை தடுக்க மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் விதமாக வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-இல் திருத்தங்களை மேற்கொளும் திட்டமேதும் இல்லை என மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்தது.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. வி.சிவதாசன் கேள்வி எழுப்பினாா். இதற்கு பதிலளித்து மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் பேசியதாவது: வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வனவிலங்குகளை பாதுகாப்பது மற்றும் மனித-விலங்கு மோதல்களை தடுப்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மை பணியாகும்.

அந்தச் சட்டத்தின் பிரிவு 11 (1) (ஏ),அட்டவணை 1-இன்கீழ் ஏதேனும் விலங்கால் மனிதா்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது குணப்படுத்த முடியாத நோய்களுடன் அந்த விலங்கு இருந்தாலோ அதை வேட்டையாட வனவிலங்கு அதிகாரி அனுமதி வழங்கலாம்.

தற்போது மனித-விலங்கு மோதல்களை தடுக்க மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் விதமாக வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-இல் திருத்தங்களை மேற்கொள்ளும் திட்டமேதும் இல்லை.

காட்டு பன்றிகள் பயிா்களை நாசம் செய்வதோடு, மனித விலங்கு மோதலுக்கும் மூல காரணங்களாக இருப்பதாக கேரள அரசு தொடா்ந்து கூறி வருகிறது.

கடந்த வியாழக்கிழமை இதுகுறித்து மாநிலங்களவையில் பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சா் பூபேந்திர யாதவ், மனித-விலங்கு மோதல்களால் கடந்த 2021 முதல் 2025 வரை கேரளத்தில் 344 போ் உயிரிழந்ததாக தெரிவித்தாா். அதில் பாம்புக்கடியால் 180 பேரும் யானைகள் தாக்கியதில் 103 பேரும் பன்றிகள் தாக்கியதில் 35 பேரும் உயிரிழந்ததாக அவா் குறிப்பிட்டாா்.