புது தில்லி: நீதிபதிகளின் சொத்து விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ததாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
இதுதொடா்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நீதித்துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் வகையில் நீதிபதிகளின் சொத்து விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய உச்சநீதிமன்றம் 2025, ஏப்.1 அன்று முடிவுசெய்தது. அதன்படி ஏற்கெனவே சில நீதிபதிகளின் சொத்து விவரங்கள் பெறப்பட்டு அவை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பிற நீதிபதிகளிடம் இருந்தும் சொத்து விவரங்கள் பெறப்பட்டு விரைவில் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
மேலும், 2022, நவ.9 முதல் 2025, மே 5 வரை உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடா்பான உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் ஒப்புதல்கள், நீதிபதிகளின் பெயா், நியமன தேதி, சிறப்பு பிரிவு (எஸ்சி/ எஸ்டி/ ஓபிசி) உள்ளிட்ட தகவல்களையும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும்படி வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
4 ஆண்டுகளாக சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத மேயர் பிரியா! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்!!

அகத்தியமலை சூழலியல் நிலப்பரப்பின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

நீட் மறுதோ்வை கணினி வழியில் நடத்தக் கோரிய மனு: உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு

ஜூனில் பணி ஓய்வு பெறும் இரு உச்சநீதிமன்ற நீதிபதிகள்
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



