பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்! - மோடி
இந்த யுகத்தில் போருக்கு இடமில்லை; பயங்கரவாதச் செயல்களுக்கும் இடமில்லை - பிரதமர் உரையிலிருந்து...


பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையே ’ஆபரேஷன் சிந்தூர்’ என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் நாட்டு மக்களுடன் முதல்முறையாக ஆற்றிய உரையில் இதனை அவர் தெரிவித்தார்.
“இந்த யுகத்தில் போருக்கு இடமில்லை; அதேபோல, பயங்கரவாதச் செயல்களுக்கும் இடமில்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையே ஆபரேஷன் சிந்தூர். பயங்கரவாதத்துக்கு எதிரான செயல்பாடுகளின் புதியதொரு வடிவத்தை ஆபரேஷன் சிந்தூர் அமைத்துவிட்டது.
அணு ஆயுத போர் நடத்தப்படும் என்ற எச்சரிக்கையை இனியும் விடுத்தால் அதனைக் கண்டு இந்தியா பின்வாங்காது. அணு ஆயுதம் என்ற மிரட்டலை ஒருபோதும் இந்தியா சகித்துக்கொள்ளாது.
எந்த விதமான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டாலும் தீர்க்கமான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிக்க: சண்டை நிறுத்தம் தற்காலிகமானதே! - பிரதமர் மோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...