பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணிநேரத்திற்குள் வெளியேற உத்தரவு!

பாகிஸ்தான் தூதரக அதிகாரி, அப்பதவிக்குரிய பணிகளுக்கு மாறான செயல்களைச் செய்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News image

பாகிஸ்தான் தூதரகம்

PTI

Updated On :13 மே 2025, 4:00 pm

DIN

தில்லியில் செயல்பட்டுவரும் பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் அந்நாட்டைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், 24 மணிநேரத்திற்குள் வெளியேற வேண்டும் என மத்திய உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரி, அப்பதவிக்குரிய பணிகளுக்கு மாறான செயல்களைச் செய்வதால், வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்து மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''புது தில்லியில் செயல்பட்டுவரும் பாகிஸ்தான் உயர் ஆணைய தூதரகத்தில் பணிபுரிந்துவரும் அந்நாட்டு அதிகாரி, இந்தியாவில் நிர்ணயிக்கப்பட்டுள்ள அப்பொறுப்புக்குரிய பணிகளுக்கு மாறான செயல்களில் ஈடுபடுகின்றார். இதனால், அவர் 24 மணிநேரத்துக்குள் இந்தியாவில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். பாகிஸ்தான் அதிகாரியின் செயல்களைக் கண்டிக்கும் வகையில் அந்நாட்டு தூதரகத்துக்கு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது'' என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடந்த நான்கு நாள்களுக்கும் மேலாக ராணுவ மோதல் நிலவிவந்த நிலையில், அரசுத் தரப்பில் இருந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.